ஒடிசாவில் 161 கிலோ கஞ்சா பறிமுதல்..! 3 பேரை கைது செய்து சிறப்பு படை அதிரடி..!

Jun 13, 2023 - 05:21
 0  0
ஒடிசாவில் 161 கிலோ கஞ்சா பறிமுதல்..! 3 பேரை கைது செய்து சிறப்பு படை அதிரடி..!

ஒடிசாவின் அங்குல் மாவட்டத்தில் 161 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒடிசாவின் அங்குல் மாவட்டத்தில் உள்ள சந்திராபூர் கிராமத்தில் இருந்து 161 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து மூன்று பேரை சிறப்பு அதிரடிப் படை (STF) கைது செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட மூவரும் சந்திராபூர் கிராமத்தைச் சேர்ந்த சர்மித் உர்மா, மாதபூர் கிராமத்தைச் சேர்ந்த ரோஹித் பெஹ்ரா மற்றும் ரௌத்பாடாவைச் சேர்ந்த சுனில் தீப் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இது குறித்து எஸ்டிஎஃப் எஸ்பி கிஷோர் குமார் பாணிக்ரஹி கூறுகையில், சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் கிராமத்தில் சோதனை செய்ததில், 161 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், எஸ்டிஎஃப் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடந்து வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow