ஆளுநர் ஆரிப் முகமது கான் ஒரு சந்தர்ப்பவாதி – கேரளா முதல்வர்

Pinarayi vijayan

கடந்த சில தினங்களுக்கு முன் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், புதுடெல்லி செல்வதற்காக திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது, இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்எஃப்ஐ) சேர்ந்தவர்கள் சிலர், அவரது காரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து ஆளுநர் அவர்கள், கேரளா முதல்வர் பினராயி விஜயன் மீது குற்றசாட்டுகளை  முன்வைத்திருந்தார். அவர் கூறுகையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தனக்கு உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறார். இந்த சம்பவம் … Read more

கேரள முதல்வர் உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்த சதி – கேரள கவர்னர் குற்றசாட்டு

Keralagovernor

புதுடெல்லி செல்வதற்காக திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் சென்று கொண்டிருந்த போது, ஆளும் சிபிஐ(எம்)ன் மாணவர் பிரிவான இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்எஃப்ஐ) அவரது காரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கவர்னர் ஆரிப் முகமது கான், கேரள முதல்வர் பினராயி விஜயன் தனக்கு உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த சம்பவம் தற்செயலான சம்பவம் … Read more

சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – இந்திய மாணவர் சங்கம் போராட்டம்

பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய கோரி பல்கலைக்கழகம் எதிரே இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அரியர் தேர்வுகள் ரத்து மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பா அதிருப்தி தெரிவித்திருந்தார்.குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் செய்ததாக புகார்கள் எழுந்தன.இது தொடர்பாக அவர் மீது புகார்கள் தொடர்ச்சியாக … Read more

டெல்லி மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல்! தமிழகத்தில் வலுக்கும் போராட்டம்!

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய டெல்லி மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.  இந்த தாக்குத்துதலுக்கு எதிராக தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லி ஜமியா மிலியா இஸ்லாமிய கல்லூரி போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். அந்த தாக்குதலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பி வருகிறது. மேலும், இந்தியா முழுவதும் பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். … Read more

விதவிதமாக அபராதம் வசூலிப்பதை நிறுத்துக – இந்திய மாணவர் சங்கம் வேண்டுகோள்

இந்திய மாணவர் சங்கம் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் மாவட்ட செயலாளர் ஜாய்சன் தலைமையில் மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பிச்சுமணி மற்றும் பதிவாளர் சந்தோஷ்பாபு ஆகியோரை சந்தித்து சான்றிதழ் திருத்தம் செய்யும் பணிக்கு ரூ. 500 வசூலிக்க கூடாது என்றும் ,தேர்வு கட்டணம் தாமதமாக செலுத்தும் மாணவர்களுக்கு அபராதமாக ரூ. 2000 வசூலிக்க கூடாது என்றும் , மறுமதிப்பீடு செய்வதற்கு ரூ. 800 வசூலிக்க கூடாது என்றும் ,காமராஜ் கல்லூரி கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்த … Read more

அரசுப் பள்ளியில் படித்தவர்களே திறமைசாலிகள் – மயில்சாமி அண்ணாதுரை !

அரசுப் படித்த விஞ்ஞானிகளே இன்றைக்கு சந்திராயனை விண்ணிற்கு அனுப்பும் சாதனை செய்ததாக இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளிகளை பாதுகாக்ககோரி இந்திய மாணவர் சங்கம் நடத்தும் சைக்கிள் பேரணியை கோவையில் துவக்கி வைத்து பேசிய அவர் , அரசுப் பள்ளிகளின் கல்வித்தரம் இன்றைக்கு உயர்த்திருப்பதாக தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கே திறமையும்,புத்திசாலித்தனமும் அதிகம் இருப்பதாகவும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

நெல்லையில் SFI சார்பில் மாணவர்கள் போராட்டம்..!!

ம.தி.தா இந்து கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை ம.சு பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் திருநெல்வேலி , கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்ட கல்லூரிகளில் சமீபத்தில் உயர்த்திய கட்டண உயர்வு மற்றும் ஆங்கிலத்தில் தேர்வு எழுத வேண்டும் என்ற  நடைமுறையை மாற்றியமைத்திட இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இன்று நெல்லையில் உள்ள ம.தி.தா இந்து கல்லூரி மாணவர்கள் காலை வகுப்புக்கு செல்லாமலே கல்லூரி வளாகத்தில் நின்று கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தி வந்தார்.அப்போது … Read more

இந்திய மாணவர் சங்கம் போராட்டம் : நாகர்கோவிலில் பரபரப்பு…!!

நாகர்கோவில், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு தமிழ்நாடு உயர்கல்வி மன்ற அறிவிப்புக்கு மாறாக மாணவர்களின் தேர்வு கட்டணத்தை உயர்த்தியது. இதைக் கண்டித்தும், பல்வேறு வகைகளில் மாணவர்கள் மீது கல்வி கட்டண சுமையை ஏற்றுவதை கண்டித்தும், தமிழில் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளதை கண்டித்தும் கல்லூரி மாணவ-மாணவிகள் அடிக்கடி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்றும் குமரி மாவட்டத்தில் சில கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து அந்தந்த கல்லூரிகளின் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். இந்திய … Read more

“இந்திய மாணவர் சங்கம் தூத்துக்குடியில் நூதன போராட்டம்” உயர்கல்வி அமைச்சருக்கு அஞ்சல் அட்டையை அனுப்பினர்..!!

திருநெல்வேலி மாவட்டம் , அபிஷேகப்பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.இது திருநெல்வேலி , தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி என 3 மாவட்டத்தில் உள்ள 70 க்கும் மேற்பட்ட கல்லூரிகளை கட்டுப்படுத்தி வருகின்றது. இப்பல்கலைக்கழகத்திற்கு உட்பட்டு சுமார் ஒண்டரை லட்சம் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.அப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பாஸ்கர் அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரு அறிக்கை வெளியிடடார். அவ்வறிக்கையில் பல்கலைக்கழகத்திற்கு கீழ் செயல்படும் கல்லூரிகள் இதுவரை தமிழில் தேர்வு எழுதிக் கொண்டு இருந்தது தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் … Read more

“போராடியதற்கு துப்பாக்கிச்சூடு” “மீண்டும் ஒரு தமிழகம்” பள்ளி மாணவர்கள் மீது வெறியாட்டம் ஆடிய மேற்கு வங்க அரசு..!!

பள்ளியில் ஆசிரியர்கள் நியமிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கொடூரமான முறையில் சுட்டு படுகொலை செய்திருக்கிறது மேற்குவங்க மம்தா அரசு. மாநிலம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் வெடித்து எழுந்துள்ளது. மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி காட்டாட்சி நடத்தி வருகிறார். ஜனநாயகப்பூர்வமான போராட்டங்களை சற்றும் சகித்துக் கொள்ளமுடியாத மம்தா பானர்ஜி, பள்ளி மாணவர்களையும் விட்டு வைக்கவில்லை. மேற்குவங்கத்தின் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ளது இஸ்லாம்பூர். இங்கு உள்ள உயர்நிலைப்பள்ளியில் போதுமான ஆசிரியர்கள் நியமனம் செய்ய வலியுறுத்தி மாணவர்கள் கடந்த மூன்று நாட்களாக … Read more