நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் காலமானார்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அறவாணன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 77.நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தராக பணியாற்றிய அறவாணன் தமிழ் வளர்ச்சிக்கு சிறப்பாக பணியாற்றியவர். 1941ஆம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்த இவர், தமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டக் குழு உறுப்பினராக பணியாற்றி உள்ளார். சமூகவியல், மானுடவியல், மொழியியல், இலக்கணம், கல்வியியல், வரலாறு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 56 நூல்களை வெளியிட்டுள்ளார்.தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசை 3 … Read more

மாணவர்கள் போராட்டம் போலீஸ் தடியடி ..!!

உயர்த்தப்பட்ட கட்டண உயர்வை குறைக்க கோரியும் , தமிழில் தேர்வு எழுதும் நடைமுறையை மாற்றம் செய்ததை கண்டித்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை தடியடி.நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் துணை வேந்தர் பாஸ்கர் தொடர்ந்து மாணவர்கள் விரோத போக்குகளை கடைப்பிடித்து வருவதாக இந்திய மாணவர் சங்கத்தினர் குற்றம்சாட்டினார்.பருவ தேர்வு வரும் 6 மாதங்களுக்கு ஒருமுறை எதாவது ஒரு பெயரை சொல்லி கட்டணத்தை உயர்த்தி வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.இந்நிலையில் இந்த பருவத்தேர்வுக்கு வருகைப்பதிவேடு குறைந்தால் தனித்தனியே பாடங்கள் அடிப்படையில் … Read more

நெல்லையில் SFI சார்பில் மாணவர்கள் போராட்டம்..!!

ம.தி.தா இந்து கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை ம.சு பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் திருநெல்வேலி , கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்ட கல்லூரிகளில் சமீபத்தில் உயர்த்திய கட்டண உயர்வு மற்றும் ஆங்கிலத்தில் தேர்வு எழுத வேண்டும் என்ற  நடைமுறையை மாற்றியமைத்திட இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இன்று நெல்லையில் உள்ள ம.தி.தா இந்து கல்லூரி மாணவர்கள் காலை வகுப்புக்கு செல்லாமலே கல்லூரி வளாகத்தில் நின்று கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தி வந்தார்.அப்போது … Read more

” அதிக மதிப்பெண் எடுத்தால் போதாது ” தனித்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்…துணை வேந்தர் பேச்சு..!!

நெல்லை, “மாணவர்கள் படிக்கும் போதே தங்களுடைய தனித்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் கூறினார். முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்தில் 4 என்ஜினீயரிங் படிப்புகள் உள்ளன. இதில் 225 மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளனர். அதேபோல் எம்.பி.ஏ. படிப்பில் 41 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு வகுப்புகள் தொடக்க விழா அண்ணா பல்கலைக்கழக மண்டல அலுவலகத்தில் … Read more

தமிழ் மொழிக்காக போராட்டம் அறிவித்தனர் கல்லூரி மாணவர்கள்..!! நெல்லையில் பரபரப்பு..

திருநெல்வேலி,   திருநெல்வேலி மாவட்டம் , அபிஷேகப்பட்டியில் உள்ளது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இது திருநெல்வேலி , தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி என 3 மாவட்டத்தில் உள்ள 70 க்கும் மேற்பட்ட கல்லூரிகளை கட்டுப்படுத்தி வருகின்றது. இப்பல்கலைக்கழகத்திற்கு உட்பட்டு சுமார் ஒண்டரை லட்சம் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.அப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பாஸ்கர் அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரு அறிக்கை வெளியிடடார். அவ்வறிக்கையில் பல்கலைக்கழகத்திற்கு கீழ் செயல்படும் கல்லூரிகள் இதுவரை தமிழில் தேர்வு எழுதிக் கொண்டு இருந்தது தற்போது … Read more

பேருந்துகள் ஓடாததால் இன்றும் நாளையும் நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து !

போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம் காரணமாக இன்றும் நாளையும் நடைபெறவிருந்த M.Phil (ஆய்வியல் நிறைஞர்)மற்றும் தனித் தேர்வு (Private Exam) ஒத்திவைக்கப்பட்டுள்ளது .  தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும்   மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது .. போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசுப் பேருந்துகள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக தேர்வுகளை ஓத்தி வைப்பதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது .. source: dinasuvadu.com