ஹரியானா அமைச்சர் சந்தீப் சிங் மீது பாலியல் புகார்!

ஹரியானா அமைச்சர் சந்தீப் சிங் மீது பயிற்சியாளர் பாலியல் குற்றச்சாட்டு. ஹரியானா விளையாட்டுத்துறை அமைச்சரும், இரண்டு முறை ஒலிம்பியனுமான சந்தீப் சிங் மீது ஜூனியர் தடகள பயிற்சியாளர் பாலியல் குற்றசாட்டை முன்வைத்து, அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அமைச்சர் சந்தீப் சிங்கின் குடியிருப்பு மற்றும் முகாம் அலுவலகத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்பட்டுள்ளது. அங்கு அவர் தனது தேசிய விளையாட்டு சான்றிதழ் நிலுவையில் இருப்பதாக கூறி தன்னை அழைத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை இந்திய … Read more

சிறுமி வன்கொடுமை – 4 பேருக்கு ஆயுள் தண்டனை!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் உறவினர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு. சென்னையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்த போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறுமியின் தாத்தா, சித்தப்பாக்கள் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், இரு சகோதரர்களில் ஒருவருக்கு 10 ஆண்டுகள், மற்றொருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பாக மாவட்ட குழந்தைகள் … Read more

பாலியல் வழக்கு; சிறை தண்டனை குறைப்பு.. சாட்சி சொல்ல பொதுமக்கள் முன்வருவதில்லை – உயர்நீதிமன்றம்

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேரின் 10 ஆண்டு சிறை 3 ஆண்டாக குறைப்பு. குற்ற வழக்குகளின் புலன் விசாரணையில் சாட்சி சொல்ல பொதுமக்கள் யாரும் முன்வருவதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொதுநலனில் ஆர்வமுள்ள சிலர் மட்டுமே சாட்சி சொல்ல வருகின்றனர் என பாலியல் வழக்கில் தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டில் நீதிபதி ஜெயசந்திரன் வேதனை தெரிவித்தார். இதனிடையே, 2006-ல் 16 வயது சிறுமிக்கு நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 … Read more

பரபரப்பு…காங்.தலைவர் சோனியா காந்தியின் தனிப்பட்ட செயலாளர் மீது பாலியல் வழக்கு!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தனிப்பட்ட செயலாளர் பிபி மாதவன் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தனிப்பட்ட செயலாளர் பிபி மாதவன்(வயது 71) மீது பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் டெல்லி போலீசார் பலாத்கார வழக்கு பதிவு செய்துள்ளனர்.மேலும்,மாதவன் மீது “கிரிமினல் மிரட்டல்” வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக,பாதிக்கப்பட்ட பெண்,டெல்லி போலீசில் அளித்த புகாரில்: “பிப்ரவரி 2020 இல் என் கணவர் இறந்த பிறகு,நான் வேலை தேட … Read more

#JustNow: சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தவருக்கு 10 ஆண்டு சிறை!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான ரங்கநாதன் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை. சென்னையில் கடந்த 2016ம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான ரங்கநாதன் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய உத்தரவிட்டது. கடந்த 2016ம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் ரங்கநாதன் என்பவர் மீது … Read more

#JustNow: பாலியல் வன்கொடுமை – ‘தந்தைக்கு’ மரண தண்டனை, ‘தாய்க்கு’ ஆயுள் தண்டனை!

பாலியல் வன்கொடுமை வழக்கில் தந்தைக்கு மரண தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு. சென்னையில் பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு மரண தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதால் இருவருக்கும் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆணையிட்டார். சிறுமியை 7 வயது முதல் 16 … Read more

#BREAKING: சிறுமியின் தலை துண்டிப்பு – இளைஞருக்கு தூக்கு தண்டனை விதித்த நீதிமன்றம்!

சேலம் அருகே தலை துண்டித்து சிறுமியை கொன்றவருக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளது போக்சோ நீதிமன்றம். சேலம் ஆத்தூர் அருகே சுந்திரபுரம் பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, தலையை துண்டித்து கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2018-ம் ஆண்டு பூ கட்டுவதற்கு நூல் கேட்ட சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்ததாக இளைஞர் தினேஷ்குமார் மீது கொலை, பாலியல் தொல்லை, தீண்டாமை தடுப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு … Read more

பள்ளிகளில் பாலியல் தொல்லை விழிப்புணர்வு வாரம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையேடு தயாரித்து வழங்கப்படும் என அறிவிப்பு. தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு சம்மந்தப்பட்ட துறையை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அப்போது, பள்ளிக்கல்வித்துறை விளக்க குறிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். அதில், பள்ளி சிறார்களை பாலியல் வன்முறையில் இருந்து தடுக்கும் வரமாக நவம்பர் 15 முதல் 22 வரை கடைபிடிக்கப்படும் என … Read more

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை – தலைமை ஆசிரியர் கைது

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது. கோவில்பட்டியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் நாலாட்டின்புத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி வழக்கு பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் தலைமை ஆசிரியர் தாமஸ் சாமுவேல் கைது செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்துள்ள சின்னகொல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தாமஸ் சாமுவேல் (57) இவர், தூத்துக்குடி … Read more

#BREAKING: விருதுநகர் பாலியல் வன்கொடுமை – 4 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

விருதுநகரில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர். விருதுநகரில் பட்டியலின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஹரிஹரன், ஜுனைத் அகமத், மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிபிசிஐடி போலீசார் கைது செய்திருந்தனர். இதன்பின் இந்த வழக்கில் கைதான ஹரிஹரன், ஜூனைத், மாடசாமி, பிரவீன் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் கடந்த சில நாட்களாக … Read more