பாலியல் வழக்கு; சிறை தண்டனை குறைப்பு.. சாட்சி சொல்ல பொதுமக்கள் முன்வருவதில்லை – உயர்நீதிமன்றம்

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேரின் 10 ஆண்டு சிறை 3 ஆண்டாக குறைப்பு.

குற்ற வழக்குகளின் புலன் விசாரணையில் சாட்சி சொல்ல பொதுமக்கள் யாரும் முன்வருவதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொதுநலனில் ஆர்வமுள்ள சிலர் மட்டுமே சாட்சி சொல்ல வருகின்றனர் என பாலியல் வழக்கில் தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டில் நீதிபதி ஜெயசந்திரன் வேதனை தெரிவித்தார். இதனிடையே, 2006-ல் 16 வயது சிறுமிக்கு நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேரின் 10 ஆண்டு சிறை 3 ஆண்டாக குறைக்கப்பட்டது.

4 பேருக்கு சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை குறைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, பழனி, ஜெயக்குமார், மணி பாரதி, கோபிநாத் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறைக்கப்பட்டது. தண்டனையை எதிர்த்து 4 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். 2006-ஆம் ஆண்டில் துணை நடிகையாக இருந்த 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment