பரபரப்பு…காங்.தலைவர் சோனியா காந்தியின் தனிப்பட்ட செயலாளர் மீது பாலியல் வழக்கு!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தனிப்பட்ட செயலாளர் பிபி மாதவன் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தனிப்பட்ட செயலாளர் பிபி மாதவன்(வயது 71) மீது பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் டெல்லி போலீசார் பலாத்கார வழக்கு பதிவு செய்துள்ளனர்.மேலும்,மாதவன் மீது “கிரிமினல் மிரட்டல்” வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக,பாதிக்கப்பட்ட பெண்,டெல்லி போலீசில் அளித்த புகாரில்: “பிப்ரவரி 2020 இல் என் கணவர் இறந்த பிறகு,நான் வேலை தேட … Read more

பாலியல் புகார் விவகாரம் – ரொனால்டோவிடம் 580 கோடி இழப்பீடு கோரிய முன்னாள் மாடல் அழகி!

2009ஆம் ஆண்டு தன்னை கற்பழித்ததாக கூறிய முன்னாள் அமெரிக்க மாடல் கேத்ரின் மயோர்கா ரொனால்டோவிடம் 580 கோடி இழப்பீடு கோரியுள்ளார். போர்ச்சுக்கல்லின் புகழ்பெற்ற கால்பந்து அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இவர் கடந்த 2009ஆம் ஆண்டு கேத்ரின் மயோர்கா எனும் அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் மாடல் அழகி கேத்ரின் மயோர்காவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவர் கூறியிருந்தார். இதுகுறித்து அமெரிக்க முன்னால் மாடல் அழகி கேத்ரின் மயோர்கா அவர்கள் தனக்கு ரொனால்டோ பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், அதை … Read more

கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண் – பாஜக பிரமுகர் விஜய் திரிபாதி கட்சியிலிருந்து நீக்கம்!

மத்திய பிரதேச மாநிலத்தில் 20 வயது இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஜெய்ப்பூர் மண்டல பாஜக தலைவர் விஜய் திரிபாதி கட்சியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் எனும் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஷாதோல் மாவட்டத்தில் உள்ள 20 வயது இளம்பெண் ஒருவர் காணாமல் போனதை அடுத்து, அவரின் பெற்றோர்கள் ஜெய்ப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்து காவல்துறையினர் விசாரித்ததில் அவருக்கு ஏற்கனவே அறிமுகமான பள்ளி தலைமை … Read more

5 வருடங்களுக்கு முன்பதாக சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகிய 70 வயது பெண்ணுக்கு ஆயுள் தண்டனை உத்தரவு!

2015 ஆம் ஆண்டில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் 70 வயது பெண் மற்றும் அவரது மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தற்பொழுது உத்திரப்பிரதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்படுவதும்,  கொலை செய்யப்படுவதும் அதிகரித்துவிட்டது. இதற்கான தண்டனை தொடர்ச்சியாக வழங்கப்படும் பட்சத்தில் இந்த குற்றங்கள் குறையும் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தில் 2015 ஆம் ஆண்டு 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் … Read more

பலாத்காரம் செய்து 2 பெண்கள் கொலை – 5 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை!

விழுப்புரத்தில் பலாத்காரம் செய்து 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் தெருநாவலூர் காவல் நிலையத்திற்குட்பட்ட கொத்தனூர் எனும் கிராமத்தில் 39 வயதுடைய பெண் ஒருவர் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த போது பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளை போலீசார் தேடி வந்துள்ளனர், ஆனால் கிடைக்கவில்லை. இது போல 2014 ஆம் ஆண்டில் … Read more

ஹத்ராஸ் வழக்கு அதிர்ச்சி அளிக்கிறது – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

ஹத்ராஸ் வழக்கு அதிர்ச்சி அளிக்கிறது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் எனும் கிராமத்தில் 19 வயது பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் நான்கு உயர்ஜாதி ஆண்களால் பலாத்காரம் செய்யப்பட்டு கொடுமையாக கொலை செய்யப்பட்ட நிலையில், இந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக தற்போது 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுப் பெற்ற நீதிபதி சந்திர பால் சிங் மற்றும் … Read more

சிறுமி பலாத்கார வழக்கில் விதிக்கப்பட்ட குண்டர் சட்டம் ரத்து…!!

சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் 7ம் வகுப்பு மாணவியைலிப்ட் ஊழியர்கள், காவலாளிகள், பிளம்பர்கள் என பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில்  17 பேரை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்தனர். இந்நிலையில்  குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி 17 பேர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் வழக்குப்பதிவு செய்து 30 நாட்களுக்குள் குண்டர் சட்டத்தை பதிவு செய்ய வேண்டும் . காலதாமதமாக குண்டர் சட்டம் பதிவு செய்துள்ளதால் அதை ரத்து செய்வதாக அறிவித்து உத்தரவிட்டார்.இணைத்த வழக்கில் ஒருவர் … Read more

ரஃபேல் ஒப்பந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் : உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்…!!

ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக, மீண்டும் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றன. இந்த ஒப்பந்தம் தொடர்பாக உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, மூத்த … Read more