வேகமாக வந்து மோதிய எஸ்யூவி..தூக்கி வீசப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிள்..! வைரலாகும் வீடியோ.!

Delhi video

தேசிய தலைநகரான டெல்லியில் எஸ்யூவி மோதியதில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் 24ம் தேதி அதிகாலை 1 மணியளவில் கன்னாட் பிளேஸ் மார்க்கெட் பகுதியில், போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது பணியை செய்துகொண்டிருந்துள்ளார். கானாட் பிளேஸ் பகுதியில் சோதனை செய்துகொண்டிருக்கும் போது, போலீஸ் அதிகாரி பேரிகேடு அருகே நின்று ஒரு காரில் இருக்கும் நபருடன் பேசிகொண்டுள்ளார். அப்போது அந்த சாலையில் வேகமாக வந்த எஸ்யூவி கார், அவர் மீது … Read more

டெல்லியில் நியூஸ்கிளிக் செய்தி நிறுவன அலுவலகத்திற்கு காவல்துறையினர் சீல்.! 

News Click medida raid on today

டெல்லியில் நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்தின் மீது, வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக நிதியுதவி பெற்றதாக அமலாக்கத்துறை வழக்கு பதிந்து வைத்து இருந்தது.  இந்த வழக்கின் கீழ் கடந்த 2021ஆம் ஆண்டு அமலாக்கத்துறை நியூஸ் கிளிக் நிறுவனத்தின் மீது சோதனை நடத்தினர். இதனை தொடர்ந்து நியூஸ் கிளிக் செய்தி நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றம் சென்று வழக்கு தொடர்ந்து, அமலாக்கத்துறைக்கு எதிராக உத்தரவை பெற்றது. அதன் பெயரில் நியூஸ் கிளிக் செய்தி நிறுவனம் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொள்ள இடைக்கால … Read more

முப்படை தலைமை தளபதி அனில் சவுகானுக்கு Z+ பாதுகாப்பு!

பாதுகாப்புப் படைகளின் தளபதி ஜெனரல் அனில் சவுகானுக்கு ‘Z’ வகை ஆயுதப் பாதுகாப்பை வழங்கிய டெல்லி அரசு. நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து 9 மாதங்களுக்கும் மேலாக அப்பதவி காலியாக இருந்தது. இந்த சமயத்தில், நாட்டின் 2-வது முப்படை தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான் கடந்த 28-ம் தேதி நியமிக்கப்பட்டதை அடுத்து … Read more

பரபரப்பு…காங்.தலைவர் சோனியா காந்தியின் தனிப்பட்ட செயலாளர் மீது பாலியல் வழக்கு!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தனிப்பட்ட செயலாளர் பிபி மாதவன் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தனிப்பட்ட செயலாளர் பிபி மாதவன்(வயது 71) மீது பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் டெல்லி போலீசார் பலாத்கார வழக்கு பதிவு செய்துள்ளனர்.மேலும்,மாதவன் மீது “கிரிமினல் மிரட்டல்” வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக,பாதிக்கப்பட்ட பெண்,டெல்லி போலீசில் அளித்த புகாரில்: “பிப்ரவரி 2020 இல் என் கணவர் இறந்த பிறகு,நான் வேலை தேட … Read more

#Breaking:பாகிஸ்தானுக்கு உளவு – இந்திய விமானப்படை வீரர் கைது!

பாகிஸ்தான் நாட்டிற்காக இந்தியாவில் உளவு பார்த்த இந்திய விமானப்படை வீரர் ஒருவரை டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு கைது செய்துள்ளது.குற்றம் சாட்டப்பட்ட இந்திய விமானப்படை வீரரின் பெயர் தேவேந்திர சர்மா என கூறப்படுகிறது. இந்திய விமானப்படை வீரர் தேவேந்திர சர்மா,பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு இந்தியா விமானப்படை குறித்த சில தகவல்களை பரிமாறியதாக சந்தேகம் எழுந்துள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும்,இந்திய விமானப்படை வீரரின் மனைவியின் வங்கிக்கணக்கில் சந்தேகத்திற்கிடமான பணப்பரிவர்தனைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. Crime Branch of Delhi … Read more

ஒரு முஸ்லீம் பிரதமரானால்…40% இந்துக்கள் கொல்லப்படுவார்கள் – யதி நரசிங்கானந்த் சர்ச்சை கருத்து!

ஒரு முஸ்லீம் பிரதமரானால்,50 சதவீதம் இந்துக்கள் மதம் மாறுவார்கள், 40 சதவீதம் பேர் கொல்லப்படுவார்கள் என்று யதி நரசிங்கானந்த் கருத்து. டெல்லி புராரி மைதானத்தில் நேற்று இந்து மகா பஞ்சாயத்து  நடைபெற்றது.அப்போது,கூட்டத்தில் பேசிய தஸ்னா தேவி கோவில் பூசாரி யதி நரசிங்கானந்த்,முஸ்லிம் ஒருவர் இந்தியாவின் பிரதமரானால் அடுத்த 20 ஆண்டுகளில் 50 சதவீத இந்துக்கள் மதம் மாறுவார்கள் என்று கூறினார்.குறிப்பாக,இந்துக்கள் தங்கள் பாதுகாப்புக்காக ஆயுதம் ஏந்தி போராடும்படி நரசிங்கானந்த் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. 40 சதவீதம் பேர் … Read more

தன்னை தானே சுட்டு கொண்ட தலைமை காவலர் – மருத்துவமனையில் அனுமதி!

டெல்லியிலுள்ள தலைமை காவலர் ஒருவர் தன்னை தானே சுட்டு கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் மேற்கு டெல்லியில் உள்ள வசந்த் விகார் என்னும் பகுதியில் 35 வயதுடைய ராகேஷ் எனும் தலைமை காவல் அதிகாரி தலையில் துப்பாக்கி வைத்து சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக காவலர் ராகேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருதாகவும், காவலர் ராஜேஷின் உடல் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது … Read more

கொரோனா இரண்டாம் அலையில் டெல்லியில் மட்டும் 42 காவலர்கள் உயிரிழப்பு!

கொரோனா இரண்டாம் அலை காரணமாக டெல்லியில் மட்டும் 42 காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த காவல்துறையினரின் குடும்பத்திற்கு சில நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தற்போது தான் சற்று கொரோனாவின் புதிய தொற்றுகள் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நெருக்கடியான இந்த காலகட்டத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய காவலர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் செவிலியர்கள் உள்ளிட்டோர் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். … Read more

இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமார் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ஒரு லட்சம் சன்மானம் – டெல்லி போலீசார்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வரக்கூடிய இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமார் குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என டெல்லி போலீசார் அறிவித்துள்ளனர். ஒலிம்பிக்கில் இரு முறை தங்கம் வென்ற மல்யுத்த வீரர் தான் சுஷில்குமார். மே மாதம் ஆறாம் தேதி டெல்லியில் உள்ள சத்ராசல் அரங்கில் மூத்த வீரர்களுக்கும் இளம் வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் இளம்  மல்யுத்த வீரர்களான குமார், அஜய், பிரின்ஸ், அமிர், சாகர் உள்ளிட்ட … Read more

என் கணவரை முத்தமிடுவதை உங்களால் தடுக்க முடியுமா? காவல்துறையினரிடம் பெண் அத்துமீறல் – வைரல் வீடியோ உள்ளே!

ஊரடங்கை மீறிய தம்பதிகள் மீது டெல்லியில் வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து காவல்துறையினரிடம் நான் என் கணவரை முத்தமிடுவதை உங்களால் தடுக்க முடியுமா என அத்துமீறி பேசிய பெண்ணின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கொரோனா வைரஸின் இரண்டாம் அலை இந்தியாவில் தற்பொழுது உருவாகி நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் தினமும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக பாதிக்கப்படுவதுடன், நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் … Read more