எங்களுக்கு சனிக்கிழமைகள் தேவைப்படுகிறது… அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.!

Minister Anbil Mahesh

தற்போது வடகிழக்கு பருவமழை மற்றும் தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கும் அவ்வப்போது விடுமுறை அளிக்கும் சூழ்நிலைகளும் உருவாகிறது. இம்மாதிரியாக விடப்படும் அவசரகால  பள்ளி விடுமுறைகளை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் வேலைநாட்களாக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். மாணவர்களின் P.E.T … Read more

ஆசிரியர்களின் கோரிக்கையை சரி செய்ய புதிய செயலி.! அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.!

Minister Anbil Mahesh

சில வாரங்களுக்கு முன்னர் சென்னையில், பகுதிநேர ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள், இடைநிலை ஆசியர்கள் என பல்வேறு ஆசிரியர்கள் அமைப்பினர் தங்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர் . இந்த போராட்டத்தை தொடர்ந்து, பள்ளிக்கல்விதுறை உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதில் தோல்வி ஏற்பட்டு, அதன் பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உடன் பேச்சுவார்த்தை நடத்தி அதில் உடன்பாடு எட்டப்பட்டு போராட்டம் கைவிடப்பட்டது. அப்போது பள்ளிக்கல்வித்துறை சார்பில், … Read more

அமைச்சருடனான பேச்சுவார்தையில் சுமூக முடிவு.! ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்.! 

Minister Anbil Mahesh - Middle school Teachers

தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் ஆகியோர் கடந்த வாரம் சென்னையில் போராட்டம் நடத்தினர். பணி நியமனம், சம வேலை சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வந்தனர். பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அரசுக்கும் – ஆசிரியர்களுக்கும் உடன்பாடு ஏற்பட்டு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து தொடக்கக்கல்வி ஆசிரியர்கள், தங்கள் 30 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று (அக்டோபர் … Read more

போராட்டம் தொடரும்! இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி!

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு. சென்னையில் இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னை நுங்கப்பாக்கத்தில் 4-ஆவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சமயத்தில், பசுமைவழி சாலையில் உள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் இல்லத்தில் … Read more

பழனிசாமிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம்!

வதந்திகளை நம்பி அறிக்கை விட்டுள்ளார் பழனிசாமி என்று அமைச்சர் அன்பில் மகேஷ் விமர்சனம். ஆதாரமற்ற அறிக்கைவிடும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளை வலுப்படுத்தும் நாம் ஊர் பள்ளி திட்டத்தை கொச்சைப்படுத்துகிறார் எடப்பாடி பழனிசாமி. திராவிட மாடல் அரசின் கீழ் பொது கல்வி முறையை நோக்கி தமிழ்நாடு இன்று நகர்ந்து கொண்டிருக்கிறது. நம்ம ஊர் பள்ளி திட்டம் பற்றி புரிதல் இல்லாதவர்கள் கூறும் வதந்திகளை நம்பி அறிக்கை … Read more

விளையாட்டு நேரத்தில் வகுப்புகள் எடுக்க கூடாது – அமைச்சர் அன்பில் மகேஷ்

இல்லம் தேடி கல்வித் திட்டம் இந்தியா முழுவதும் பேசப்படுகிறது அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு. விளையாட்டு நேரத்தில் மாணவர்களுக்கு மற்ற வகுப்புகள் எடுக்க கூடாது என்று வலியுறுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறுகையில், இல்லம் தேடி கல்வித் திட்டம் இந்தியா முழுவதும் பேசப்படுகிறது. தமிழகத்திலேயே முதன்முறையாக திண்டுக்கல்லில் நூலகத்துறை சார்பில் நூலக நண்பர்கள் திட்டத்தை தொடங்கி உள்ளோம். இந்தத் திட்டத்திற்காக … Read more

இதற்கான தேர்வு முடிவுகள் வெளியீடு! 1,500 மாணவர்களுக்கு மாதம் 1,500 ரூபாய்! – அமைச்சர் அறிவிப்பு

தமிழ் மொழி இலக்கிய திறன் அறிவு தேர்வு முடிவுகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர். தமிழ் மொழி இலக்கிய திறன் அறிவு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். பள்ளிக் கல்வித் துறையின் இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ் மொழி இலக்கிய திறன் அறிவு தேர்வில் நாகையை சேர்ந்த மாணவி அபிநயா 100-க்கு 97 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். அதிக மதிப்பெண் பெற்ற 1,500 மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,500 … Read more

10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை இன்று வெளியீடு!

பொதுத்தேர்வுக்கான  கால அட்டவணையை இன்று வெளியிடுகிறார் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில். 2022-23ம் கல்வியாண்டிற்கான 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதிகள் மற்றும் கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று பிற்பகல் வெளியிடுகிறார். 2022-23ம் கல்வியாண்டிற்கான 10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. அந்த தேர்வுகளுக்கான பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை மதியம் 2.30 மணிக்கு வெளியிடுகிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். பொதுவாக 10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் … Read more

தமிழ் தான் திராவிடத்தை ஆளவும் வைக்கிறது, தமிழர்களை வாழவும் வைக்கிறது – அமைச்சர்

திராவி மாடல் ஆட்சி தமிழகத்தை ஆண்டு கொண்டியிருப்பதற்கான காரணம் தமிழ் தான் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு. தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டாரம் செல்லப்பன்பேட்டை கிராமத்தில் இன்று சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு இந்த சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார். இதன்பின் பேசிய அவர், திராவிட ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி, தமிழகத்தை திராவிட ஆட்சி, திராவி மாடல் ஆட்சி, … Read more

பள்ளி வளாகங்களில் கூட்டம் நடத்த அனுமதியில்லை!

பள்ளி வளாகங்களில் கூட்டம் நடத்தப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த உத்தரவு என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எந்த அரசியல் அமைப்பினருக்கும் பள்ளி வளாகங்களில் கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. பள்ளி வளாகங்களில் கூட்டம் நடத்தப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த உத்தரவிட்டுள்ளேன். பள்ளியை சுத்தம் செய்யவதாக பள்ளி நிர்வாகத்திடம் கூறிவிட்டு முன்னறிவிப்பின்றி ஆர்எஸ்எஸ் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். பள்ளிகளில் Right, Left உள்ளிட்ட எந்த இரு கருத்தியலும் நுழையக்கூடாது … Read more