#JustNow: பாலியல் வன்கொடுமை – ‘தந்தைக்கு’ மரண தண்டனை, ‘தாய்க்கு’ ஆயுள் தண்டனை!

பாலியல் வன்கொடுமை வழக்கில் தந்தைக்கு மரண தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.

சென்னையில் பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு மரண தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதால் இருவருக்கும் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆணையிட்டார். சிறுமியை 7 வயது முதல் 16 வயது வரை தந்தை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக 1098 என்ற உதவி எண்ணில் அளித்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்