#JustNow: ஓபிஎஸ் போஸ்டர்கள் கிழிப்பு – ஆதரவாளர்கள் போராட்டம்!

சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் போஸ்டர் கிழிக்கப்பட்டதாக கூறி, அவரது ஆதரவாளர்கள் போராட்டம். அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவை என்று நேற்று நடந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் வலியுறுத்திய நிலையில், யார் அந்த ஒற்றை தலைமை என்பதை கட்சி குடிவு செய்யும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். ஒன்றை தலைமை பொறுப்புக்கு எடப்பாடி பழனிசாமி தான் என்று ஒருபக்கம் அவரது ஆதரவாளர்களும், மறுபக்கம்  ஓ.பன்னீர்செல்வம் தான் அதிமுகவுக்கு ஒற்றை தலைமையாக இருக்க … Read more

காதலியே வேண்டாம் என்று ஐபிஎல் பார்க்க வந்துள்ளேன் – வைரல் புகைப்படம் உள்ளே..!

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் சீசன் 15வது போட்டியில் நேற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இந்நிலையில் இந்த போட்டியை  காண வந்திருந்த ரசிகர்களில் ஒருவர் எனது காதலி நானா ஐபிஎல்-லா எனக் கேட்டார். நான் தற்பொழுது இங்கு இருக்கிறேன் என எழுதியபடி போஸ்டர் ஒன்றை கையில் வைத்துள்ளார். இது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நான் கூறினால் “சசிகலா ஒழிக” என்று நாளைக்கே ஒரு லட்சம் போஸ்டர்கள் ஓட்டுவார்கள் – அமைச்சர் சிவி சண்முகம்

சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுகவினர் போஸ்டர் அடிப்பது என்பது பெரிய விஷயமா? என்று அமைச்சர் சிவி சண்முகம் பேசியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இன்று சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்து போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்கள் என்ற நிபுணர் கேள்விக்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், யார் சொன்னது, எவன் சொன்னது என்று கேட்டார். இதற்கு சசிகலாவுக்கு ஆதரவாக முன்னாள் எம்எல்ஏ ரகுபதி போஸ்டர் ஒட்டி வருகிறார் என்று … Read more

“ஹத்ராஸ் விவகாரத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் தான் காரணம்” என போஸ்டர் ஒட்டிய பாஜக!

ஹத்ராஸ் சம்பவத்திற்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தான் காரணம் என குமரி மாவட்ட பாஜகவினர் போஸ்டர் ஓட்டினார்கள். உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் கிராமத்தில் உள்ள தலித் பெண்ணை உயர் ஜாதியை சேர்ந்த நான்கு ஆண்கள் கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்தனர். இதற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக குமரி மாவட்ட மாவட்ட பாஜகவினர் போஸ்டர் ஓட்டினார்கள். அந்த போஸ்டரில் இந்த விவகாரத்தில் “காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினரால் படுகொலை செய்யப்பட்ட” என குறிப்பிட்டிருந்தனர். பாஜகவினரின் இந்த செயல் … Read more

போஸ்டர் அடிக்க வேண்டாம் என்பதை போஸ்டர் அடித்து ஒட்டிய ரசிகர்கள்..!

தமிழகத்தில் இன்னும்  சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.  இதனால், தமிழகத்தில் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது.  மேலும், ரஜினி மன்றங்களும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாள்களாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள ரஜினி ரசிகர்கள் சார்பாக ரஜினி அரசியலுக்கு வரவேண்டும், ரஜினி அரசியலுக்கு வருவார்,  அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம் கட்சி வேறு ஆட்சி வேறு இப்ப இல்லனா எப்பவுமே இல்லை போன்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது. … Read more

“திரையுலகை ஆண்டது போதும், தமிழகத்தை ஆள வா புரட்சி வேங்கையே ” – போஸ்ட்ரை ஒட்டி ஏற்படுத்திய சூர்யா ரசிகர்கள்.!

திரையுலகை ஆண்டது போதும், தமிழகத்தை ஆள வா புரட்சி வேங்கையே ” என்ற வாசகங்களுடன் கூடிய போஸ்ட்ரை சூர்யா ரசிகர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் வழக்கமாக போஸ்ட்ர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். சமீபத்தில் கூட மதுரையில் தளபதி ரசிகர்கள் விஜய் மற்றும் சங்கீதாவின் திருமண நாளை முன்னிட்டு எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை போன்று சித்தரித்தும், மாஸ்டர் படத்தை ஓடிடியில் வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திரையரங்குகள் திறப்பது குறித்தும் போஸ்ட்ர்கள் ஒட்டி … Read more

அரியரை வென்ற அரசராக முதல்வரை புகழ்ந்து ஒட்டப்பட்ட போஸ்ட்ர்.! கவனத்தை ஈர்த்த மாஸ் வசனங்கள்.!

திண்டுக்கல்லில் அரியர் எழுதிய மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்று கூறியதை அடுத்து நன்றி தெரிவித்து ஒட்டிய போஸ்ட்ர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கொரோனா வைரஸின் பாதிப்பு காரணமாக கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளுக்கும் தடை விதித்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்திருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மேலும் அரியர்ஸ் எழுதுவதற்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என்றும் கூறியதை அடுத்து மாணவ, மாணவர்கள் முதல்வருக்கு சமூக … Read more

“விரைவில் முடியும் ஊரடங்கு, மாஸ்டர்க்கு காத்திருக்கு திரையரங்கு” – மதுரையில் தளபதி ரசிகர்களால் ஒட்டப்பட்ட போஸ்ட்ர்.!

விரைவில் முடியும் ஊரடங்கு, மாஸ்டர்க்கு காத்திருக்கு திரையரங்கு என்ற வசனங்களுடன் கூடிய போஸ்ட்ரை மதுரையில் தளபதி ரசிகர்கள் ஒட்டி மாஸ்டர் படத்தை ஓடிடியில் வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சமீபத்தில் சூர்யாவின் சூரரை போற்று படத்தினை ஓடிடியில் வெளியிடவுள்ளதாக அறிவித்ததை தொடர்ந்து மாஸ்டர் படமும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவியது. … Read more

காவி உடையில் தளபதி.! விவேகானந்தருடன் ஒப்பிட்டு மதுரையில் தளபதி ரசிகர்களால் ஒட்டப்பட்ட போஸ்ட்ர்.!

மதுரையில் விஜய் ரசிகர்கள் விவேகானந்தரின் விஜயமே வருக , நல்லாட்சி தருக என்ற வசனங்களுடன் காவி உடையில் விஜய் அவர்கள் உள்ளபடி போஸ்ட்ர் ஒன்றை ஒட்டியுள்ளனர். நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தளபதி ரசிகர்கள் விஜய்யின் எப்போதும் வித்தியாசமான முறையில் போஸ்ட்ர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். சமீபத்தில் கூட விஜய் மற்றும் சங்கீதாவின் திருமண நாளை … Read more

ஒரு பக்கம் ஆலோசனை – மறுபக்கம் போஸ்டர் கிழிப்பு.!

ஒரு பக்கம் ஓ.பி.எஸ். விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், மறுபக்கம் அடுத்த முதல்வர் ஓபிஎஸ் என ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் கிழிப்பு. அடுத்த முதல்வர் ஓபிஎஸ் என அவரது தொகுதியான போடி முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் சர்ச்சையை கிளப்பியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசி பெற்ற ஒரே முதல்வர் ஓபிஎஸ் என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. தமிழகத்தின் நிரந்திர முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் எனவும் போஸ்டரில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், துணை முதல்வர் ஓ.பி.எஸ் அடுத்த … Read more