போஸ்டர் அடிக்க வேண்டாம் என்பதை போஸ்டர் அடித்து ஒட்டிய ரசிகர்கள்..!

தமிழகத்தில் இன்னும்  சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.  இதனால், தமிழகத்தில் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது.  மேலும், ரஜினி மன்றங்களும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள ரஜினி ரசிகர்கள் சார்பாக ரஜினி அரசியலுக்கு வரவேண்டும், ரஜினி அரசியலுக்கு வருவார்,  அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம் கட்சி வேறு ஆட்சி வேறு இப்ப இல்லனா எப்பவுமே இல்லை போன்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது.

இதையடுத்து,  தலைமை உத்தரவு இல்லாமல் போஸ்டர் அடிக்க வேண்டும் எனவும், தன்னிச்சையாக செயல்பட வேண்டாம்  எனவும்  ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு சுதாகர் வாய்மொழி உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், போஸ்டர் அடிக்க வேண்டாம் என்பதை போஸ்டர் அடித்து ரஜினி ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

 

 

author avatar
murugan