நாகை: ஜன.3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

ஜனவரி 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை, ஜனவரி 21-ஆம் தேதி வேலை நாள் நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வுக்காக ஜனவரி 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஜனவரி 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 3-ஆம் தேதி விடுமுறையை ஈடுகட்டும் வகையில் ஜனவரி 21-ஆம் தேதி வேலை நாளாக கருதப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் … Read more

நாகை சாமந்தன்பேட்டையில் தூண்டில் வளைவு – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உறுதி!

சென்னை:நாகப்பட்டினம் மாவட்டம் சாமந்தன் பேட்டை கிராமத்தில் தூண்டில் வளைவுடன் கூடிய சிறு துறைமுகங்கள் அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மீன்வளம்,மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் 3-வது நாள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை ரீதியான அமைச்சர்கள் பதில் அளித்து வருகிறார்கள். இந்நிலையில்,சட்டபேரவையில் தற்போது நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆளுர் ஷா நாவாஷ்,சாமந்தன் பேட்டை கிராமத்தில் தூண்டில் வளைவுடன் சிறிய துறைமுகம் அமைக்கபடுமா? … Read more

#BREAKING: உ.பியில் நடந்தது போல.. தமிழகத்தில் கோயிலில் பெண்க்கு வன்கொடுமை கொடூரம் ..!

நாகையில் கோவிலில் வைத்து பெண் கூலித்தொழிலாளிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. கணவனை இழந்த இப்பெண் தனது சகோதரி வீட்டில் தினமும் இரவு தங்கி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல இரவு தனது சகோதரி வீட்டிற்கு செல்லும்போது அவரை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரின் வாயை பொத்தி அருகிலிருந்த கோவிலில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் வன்கொடுமை செய்தவர்கள் அப்பெண்ணின் சகோதரி வீட்டிற்கு சென்று அங்கு சகோதரியின் கணவரை தாக்கி, இதுகுறித்து … Read more

இரண்டாவது நாளாக மீண்டும் உதயநிதி ஸ்டாலின் கைது !

இன்று இரண்டாவது நாளாக நடைபெற்ற பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 5 மாதங்களில் நடைபெற உள்ளது.அதனை தொடர்ந்து 100 நாள் பிரச்சாரத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி அறிவித்தார். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் நேற்றைய தினம் தனது தேர்தல் பிரச்சாரத்தை கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையிலிருந்து தொடங்கி வைத்தார்.இதில் பங்கேற்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் ஊரடங்கு விதிகளை மீறியதாக கூறி போலீசார் … Read more

நாகை,கடலூர் துறைமுகங்களில் ஏற்றப்பட்ட 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.!

நாகை, கடலூர் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.  வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதை அடுத்து நாகை, கடலூர், காரைக்கால், புதுச்சேரி துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வட மாநிலத்தை போல நாகை அருகே மாட்டு இறைச்சி சாப்பிட்ட இளைஞருக்கு கத்திக்குத்து

வட மாநிலத்தில் மாட்டு இறைச்சி  சாப்பிடவர்கள் மீது அங்கு உள்ள இந்து மக்கள் கட்சியினர் கொலைவெறித்தாக்குதல் நடத்தி வருகின்றனர். தொடர்ந்த இது போன்ற சம்பவங்கள் அங்கு அரேங்கேறி வருகிறது. இந்தநிலையில்  வட மாநிலத்தை போல  நாகப்பட்டினத்தில்  மாட்டு இறைச்சி சாப்பிட்ட இளைஞர்  தாக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முகமது பைசான் என்பவர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பொரவச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார்.இவர் தனது முகநூல்  பக்கத்தில்  மாட்டு இறைச்சி சாப்பிட்டதை பதிவிட்டிருந்தார். இவரது பதிவை பார்த்த அதே பகுதியை … Read more

கஜாபுயல் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணத்தொகையை கூட 3 தவணையாக அறிவித்திருப்பது மிகக்கொடுமையானது…!கமல் வேதனை..!!

கஜா புயலால் நாகை,தஞ்சாவூர்,திருவாரூர்,புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிப்புக்கு ஆளாகிய நிலையில் மக்கள் அடிப்படை தேவையின்றி தவித்து வருகின்றனர்.அவர்களுக்கு பல்வேறு தரப்பினர் உதவி கரம் நீட்டி வரும் நிலையில் நடிகரும் மக்கள் நீதிமையத்தின் தலைவருமான கமல்ஹாசன் இன்று மீண்டும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் புயல் பாதித்த மக்களை சந்தித்தார்.அவர்களின் குறைகளையும் அடிப்படை தேவைகளையும் கேட்டறிந்த நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் நிவாரணத்தொகையை கூட 3 தவணையாக அறிவித்திருப்பது மிகக்கொடுமையானது  என்று தெரிவித்துள்ளார். இது குறித்து டிவிட்டர் … Read more

நாகை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை..!ஆட்சியர் அறிவிப்பு..!

நாகை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கஜா புயலில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக நாகை மாவட்டம் உள்ளது.மேலும் மாவட்டத்தில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவாதலும்,மக்கள் பள்ளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதனால் அங்கு சீரமைப்பு பணிகள் தொடர்கிறது மின்சார உள்ளிட்ட தேவைகள் தற்போது வரை முழுமையாக சரிசெய்யப்படாத நிலையில் நாகை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுவதாக ஆட்சியர் சுரேஷ் அறிவித்துள்ளார். DINASUVADU

கஜாவிற்கு கரம் கொடுக்கும் நலிந்த தெருக்கூத்து கலைஞர்கள்…!!!!

தமிழகத்தில் தாக்கிய புயல்களிலே மிக கொடூரமாக தாக்கி புயல் கஜாவாகும்.வர்தா சென்னையை தாக்கியது அதிகம் என்றால்.கஜா அதை விட கொடூரமானது.ஆம் வர்தா சென்னையை மட்டுமே தாக்கியது ஆனால் கஜா ஒட்டுமொத்த தமிகத்தையும் மிரட்டி எடுத்துவிட்டு சென்றுள்ளது.இன்னும் கஜா பாதிப்படைந்த மாவட்டங்களில் உள்ள ஊர்களில் கிராமங்களில் கதி என்னவென்று  தெரியாமல் உள்ளது. ஊடகங்களும் சென்னை போன்ற தலைநகரங்களில் வெள்ளம், புயல் ஏற்பட்ட போது ஊடகங்கள்  பாதிப்புகளை மக்கள் இடத்தில் கொண்டு போய் சேர்த்தது.இதனால் மக்கள் துயரத்தில் ஆழ்ந்த மக்களின் … Read more

கஜா புயல் பாதித்த 4 மாவட்டங்களுக்கு பெட்ரோல், டீசல் தேவைக்கு…! உதவி எண்களை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு..!!

தஞ்சை,திரூவாரூர்,நாகை ,புதுகோட்டை  ஆகிய 4 மாவட்டங்களில் மக்களுக்கு பெட்ரோல்,டீசல் தேவைக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் த்மிழத்தில் 4 மாவட்டங்களை உலுக்கி எடுத்துள்ளது.இதில் நாகை,தஞ்சை,புதுக்கோட்டை,திருவாரூர் மாவட்டங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது.இதனால் மாவட்டங்களில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மக்கள் தேவைக்கு சிரமப்பட்டு வருகின்ற நிலையில் இந்திய ஆயில்பெட்ரோலிய நிறுவனம் தன் பங்கிற்கு 4 மாவட்டங்களுக்கு உதவும் வகையில் உதவி எண்களை தெரிவித்துள்ளது.இந்த 4 மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் தேவைக்கு  இந்தியன் ஆயில் பெட்ரோலிய நிறுவனம் தஞ்சை … Read more