விண்வெளியில் மாட்டிறைச்சி – நாசாவின் அசத்தலான முயற்சி!

சர்வதேச விண்வெளி மையத்தில்  மாட்டு இறைச்சியை இயற்கை முறையில் வளர்க்க நாசா தயாராகி வருகிறது.அந்த வகையில், மாடுகளில் இருந்து எடுக்கப்படும் செல்களை பயோரியாக்டர்களைப் பயன்படுத்தி,ஸ்டெம் செல்களாக மைக்ரோ கிராவிட்டியில் வளர்த்து, அவற்றை மாடுகளில் உள்ளது போன்று தசை திசுக்களாக மாற்றும் முயற்சியில் நாசா ஈடுபட்டுள்ளது. இந்த தசை திசுக்களை உணவாக சமைத்தால் இறைச்சி போன்ற சுவையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.நாசாவின் இந்த அசத்தலான முயற்சியால் இறைச்சி உண்பதற்காக விலங்குகள் கொல்லப்படுவது தடுக்கப்படும். மேலும்,இந்த செயல்முறை விண்வெளியில் வெற்றிகரமாக … Read more

மாட்டிறைச்சி விவகாரம்…! வட்டாட்சியர் இடமாற்றம்…!

மாட்டிறைச்சி விற்பனை செய்யக்கூடாது என்று உத்தரவிட்ட வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் பணியிடமாற்றம்.  திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டத்துக்கு உட்பட்ட கனங்குளம் பகுதியில் வட்டாட்சியர் தமிழ் செல்வம் அவர்கள், சனிக்கிழமை இரவு மாட்டிறைச்சி விற்பனை செய்வதாக புகார் வந்ததைத் தொடர்ந்து அங்கு ஆய்வு மேற்கொண்டார். அப்போது வேலுசாமி என்பவரின் கடைக்கு சென்று மாட்டிறைச்சி விற்பனை செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். வட்டாட்சியரின் இந்த செயல் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், வட்டாட்சியரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த … Read more

சட்டவிரோதமாக வேனில் வைத்து 1,200 கிலோ மாட்டிறைச்சி கடத்திய நபர் கைது!

மகாராஷ்டிராவை சேர்ந்த நபர் ஒருவர் 1.44 லட்சம் மதிப்புள்ள 1200 கிலோ மாட்டிறைச்சியை வேனில் வைத்து கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் தானேவில் சட்டவிரோதமாக 1.44 லட்சம் மதிப்புள்ள 1,200 கிலோ மாட்டிறைச்சி கடத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 23 வயதுடைய இந்த நபர் தனது வேனில் வைத்து மாட்டு இறைச்சியை கடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த வேனை மடக்கி பிடித்த போலீசார் அவரிடம் இருந்த ஆயிரத்து 200 கிலோ மாட்டு இறைச்சியை பறிமுதல் செய்ததுடன், … Read more

வட மாநிலத்தை போல நாகை அருகே மாட்டு இறைச்சி சாப்பிட்ட இளைஞருக்கு கத்திக்குத்து

வட மாநிலத்தில் மாட்டு இறைச்சி  சாப்பிடவர்கள் மீது அங்கு உள்ள இந்து மக்கள் கட்சியினர் கொலைவெறித்தாக்குதல் நடத்தி வருகின்றனர். தொடர்ந்த இது போன்ற சம்பவங்கள் அங்கு அரேங்கேறி வருகிறது. இந்தநிலையில்  வட மாநிலத்தை போல  நாகப்பட்டினத்தில்  மாட்டு இறைச்சி சாப்பிட்ட இளைஞர்  தாக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முகமது பைசான் என்பவர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பொரவச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார்.இவர் தனது முகநூல்  பக்கத்தில்  மாட்டு இறைச்சி சாப்பிட்டதை பதிவிட்டிருந்தார். இவரது பதிவை பார்த்த அதே பகுதியை … Read more

பசுவைக் கொன்றவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை – குஜராத்தில் அதிரடி தீர்ப்பு!

இறைச்சிக்காக பசு மாட்டை கொன்றதற்காக குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கியுள்ளது. இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆட்சியில் இருக்கும் பல மாநிலங்களில் மாட்டிறைச்சி வைத்து இருப்பவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது தொடர்கதை ஆகி வருகிறது. கடந்த உத்தரபிரதேசத்தில் மாட்டிறைச்சி வைத்ததற்காக முஸ்லீம் ஒருவர் இந்து ஆதரவாளர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மாட்டை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் இந்து அமைப்புகள் மற்றும் பாஜக சார்ந்தவர்கள் இது … Read more