அமெரிக்க பேரணியில் துப்பாக்கி சூடு.! ஒரு பெண் பலி… பலர் கவலைக்கிடம்.!  

KKFI DJ Lisa Lopez-Galvan - Kansas City Gun fire

அமெரிக்கா மிசோரியின் கன்சாஸ் நகரில் பேஸ் பால் உள்ளூர் விளையாட்டு தொடரில் வெற்றிபெற்ற  கன்சாஸ் அணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வெற்றி பேரணியை நேற்று புதன் கிழமை நடத்தினர். அந்த பேரணியின் போது திடீரென மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். பேரணியில் திடீரென நடைபெற்ற இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இந்த துப்பாக்கி சூட்டில் டிஜேயாக வேலை செய்து வந்த லிசா … Read more

கந்து வட்டிக்காரரின் வயிற்றில் 3 முறை சுட்டுக் கொன்ற பாஜக கவுன்சிலர் கைது !

கர்நாடகாவில் பாஜக கவுன்சிலர் ஒருவர் தான் வட்டிக்கு வாங்கிய கடனை திருப்பி செலுத்த மறுத்து கடன் கொடுத்தவரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் நடந்துள்ளது. கர்நாடகாவில் பெலகாவி மாவட்டத்தில் உள்ள சங்கேஷ்வர் நகராட்சியின்  14 வது வார்டு கவுன்சிலர்  உமேஷ் காம்ப்ளே,இவர் ஷைலா நிரஞ்சன் சுபேதாரி என்ற பெண்ணிடம்  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ரூ.25 லட்சத்தை கடனாக பெற்றுள்ளார். இதனை நீண்ட காலமாக செலுத்தாமல் காம்ப்ளே மறுத்து வந்துள்ளார்.இதனையடுத்து ஷைலா தான் இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் … Read more

“மிகுந்த மன வேதனை;அரசே…சட்டப்படி நடவடிக்கை எடு” – ஓபிஎஸ் வலியுறுத்தல்!

புதுக்கோட்டை நார்த்தாமலை அருகே துப்பாக்கிக்குண்டு பாய்ந்து சிறுவன் புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்ததாகக் கூறி ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும்,இதற்கு காரணமானவர்கள் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு துப்பாக்கி சூடு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில்,கடந்த ஆண்டு டிச.30 ஆம் தேதியன்று நடைபெற்ற பயிற்சியின்போது தவறுதலாக துப்பாக்கி சூடு பயிற்சி மையத்திற்கு சற்று தொலைவில் வீட்டிற்கு … Read more

இளைஞரை சுட்டுக்கொன்ற சம்பவம் – 4 பேரை கைது செய்த காவல்துறை!

திண்டுக்கல்லில் இளைஞரை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது என ஐஜி அன்பு தகவல். திண்டுக்கல் மாலபட்டி அருகே ராகேஷ் (வயது 26) என்பவர்  மீன் பிடிப்பதற்காக குத்தகைக்கு எடுத்த செட்டி குளத்தை காவல் காத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் அவரை சுட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞர் ராகேஷின் உடலில் ஆறு இடங்களில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளது. இதன்பின் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து, குளத்தை ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட … Read more

முன்னாள் ஏ.எம்.யூ மாணவர் பல்கலைக்கழக வளாகத்தில் சுட்டுக்கொலை

அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக வளாகத்திற்குள்  நேற்று ( வியாழக்கிழமை ) இளம் விளையாட்டு வீரர் ( 20 வயது ) ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.சுட்டுக்கொல்லப்பட்ட சனு அப்பாஸ் AMU வின் முன்னாள் மாணவராவார் .அவர் தனது சக நண்பர்களுடன் பயிற்சிக்காக மைதானத்தில் சென்று கொண்டிருந்த பொழுது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது .இதுகுறித்து தகவலிருந்து வந்த AMU பாதுகாப்பு படையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் . சனு அப்பாஸ் தலையில் குண்டு பாய்ந்து சம்பவ … Read more

பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை.! பதற்றத்தில் டெல்லி.!

தலைநகர் டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை முதல் நடைபெற்று வரும் நிலையில், நேற்று இரவு பெண் காவலர் ஒருவரை சில மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 முதல் நடைபெற்று வருகிறது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜக ,காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகிறது. ஆம் ஆத்மி மொத்தமுள்ள உள்ள 70 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 66 … Read more

ஆவடி ராணுவ தொழிற்சாலையில் சக வீரரை சுட்டு கொன்ற வீரர்.!

திரிபுரா மாநிலத்தை சேர்ந்த நீலம்சின்ஹா என்பவர்  சில நாட்களாக மன உளைச்சலால் இருந்ததாக கூறப்படுகிறது. பாதுகாப்பு வீரர்கள் தூங்கிக் கொண்டிருந்த அறையை நோக்கி நீலம்சின்ஹா  துப்பாக்கியால் சரமாரி சுட்டார்.இதில் கிரிஜெஷ் குமார் என்ற சக வீரர் மீது 6 குண்டுகள் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.  சென்னை ஆவடியில் மத்திய அரசுக்கு சொந்தமான கனரக வாகன தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் பலர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த நீலம்சின்ஹா … Read more

#Breaking: டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு.!

டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது சில மர்ம நபர்களால் துப்பாக்கிச் சூடு. போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் காயம் அடைந்துள்ளார். சமீபத்தில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல மாநிலங்களில் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திருத்த சட்டத்துக்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் கலவர களமாக மாறியது. இதனை … Read more

திருமண நிகழ்ச்சியில் வீடியோகிராபர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து பலி ..!

பீகார் மாநிலம்  சமஸ்திப்பூர் மாவட்டத்தில் உள்ள ரயில்வே காலனியில் நேற்று முன்தினம் இரவு திருமணம் ஓன்று நடந்து உள்ளது.இந்த திருமண நிகழ்ச்சியில்  திருமண மணப்பெண் வீட்டை சார்ந்த உறவினர்களும் , மணமகன் வீட்டை சார்ந்த உறவினர்களும் பலர் கலந்து கொண்டனர். இந்த திருமண நிகழ்ச்சி கொண்டாட்டத்தின் போது மணமக்கள் உறவினர்களில் ஒருவர் யாரோ துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு எதிர்பாராதவிதமாக திருமண நிகழ்ச்சியில் வீடியோ பதிவு செய்து கொண்டு இருந்த வீடியோகிராபர் மீது … Read more

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு – 2 போலீசார் படுகாயம்..!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள காகா சராய் பகுதியில் மாநில போலீசாருடன் பாதுகாப்பு படையினர் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதல் 2 போலீசாரும், பொதுமக்களில் ஒருவரும் படுகாயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்