கர்நாடகா தேர்தல் - ஓ.பி.எஸ். தரப்பு மேலும் 2 தொகுதிகளில் போட்டியா?
தமிழர்கள் அதிகமுள்ள மேலும் 2 தொகுதிகளிள் வேட்பாளர்களை களமிறக்க ஓ.பன்னீர்செல்வம் முடிவு.
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் ஓ.பி.எஸ். தரப்பு மேலும் 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் அன்பரசன் போட்டியிடுகிறார் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்திருந்தார். இதன்பின், இன்று நேருக்கு நேருக்கு மோதலாக இபிஎஸ் சார்பில் வேட்பாளர் நிறுத்திய அதே புலிகேசி தொகுதியில் ஓபிஎஸ் தரப்பில் நெடுஞ்செழியன் என்பவரை வேட்பாளராக அறிவித்தனர்.
இந்த நிலையில், கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் ஓ.பி.எஸ். தரப்பு மேலும் 2 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, தமிழர்கள் அதிகமுள்ள மேலும் 2 தொகுதிகளிள் வேட்பாளர்களை களமிறக்க ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பும் இன்று வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?