டிகிரி முடித்தவர்களுக்கு கூட்டுறவு வங்கியில் வேலை...உடனே விண்ணப்பியுங்கள்.!

Mar 26, 2024 - 11:07
 0  0
டிகிரி முடித்தவர்களுக்கு கூட்டுறவு வங்கியில் வேலை...உடனே விண்ணப்பியுங்கள்.!

Apex Bank Ltd: கர்நாடகா மாநில கூட்டுறவு அபெக்ஸ் வங்கி லிமிடெட்-ல் (KSC) வங்கி உதவியாளர் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து தகுதி நிபந்தனைகளையும் படித்துவிட்டு வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான  என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி 07-03-2024 அன்று தொடங்கியது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அடுத்த மாதம் 6ம் தேதி அன்று மாலை 5:30 மணிக்கு முடிவடைகிறது.

காலியிட விவரங்கள்

வங்கி உதவியாளர் - 93

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1000 எனவும், SC, ST, பிரிவுகளுக்கு ரூ. 500 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கட்டண முறை

ஆன்லைன் பேமெண்ட்

தகுதி

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது

குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 35 ஆகவும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு 40 வயது வரை விதிகளின்படி வயது தளர்வு பொருந்தும்.

பொதுவான வழிமுறைகள்

தகுதியான விண்ணப்பதாரர்கள் வங்கியின் வழிகாட்டுதலின்படி பின்வரும் ஒரிஜினல் ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
  1. டிகிரி பயின்ற பல்கலைக் கழகத்திலிருந்து பெறப்பட்ட பட்டப்படிப்பின் சான்றிதழ்.
  2. பழங்குடி பிரிவினர் விதிகளின்படி தகுதிவாய்ந்த அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ்.
  3. தகுதிவாய்ந்த அதிகாரியிடமிருந்து உடல் ஊனமுற்றோர் சான்றிதழ்.

குறிப்பு:

இது பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மொழிப் பாடங்கள் உட்பட மொத்தம் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் கன்னடத்தைப் படிக்கவும், கன்னட மொழியை எழுதவும், பேசவும், அதனை சுத்தமாக புரிந்துகொள்ளவும் தெரிந்திருக்க வேண்டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow