தேசிய விடுமுறையன்று பணியாற்றினால் இரட்டை சம்பளம்!
அம்பேத்கர் பிறந்தநாள் அன்று பணியாற்றியவர்களுக்கு இரட்டை சம்பளம் பெற தகுதியானவர்கள் என ஐகோர்ட் கிளை நீதிபதி அறிவிப்பு.
தேசிய விடுமுறை நாளன்று கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் இரட்டிப்பு சம்பளம் பெற தகுதியானவர்கள் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு அம்பேத்கர் பிறந்த நாளில் பணியாற்றிய கூடங்குளம் அணுமின் நிலைய பணியாளர்களுக்கு இரட்டை சம்பளம் வழங்க வேண்டும் என கோரி தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதில், 2018ம் ஆண்டு அம்பேத்கர் பிறந்த நாளில் பணியில் ஈடுபட்ட தங்களுக்கு இரு மடங்கு ஊதியம் வழங்கப்படாது என மறுத்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, தேசிய விடுமுறை நாளன்று பணியாற்றிய ஊழியர்களுக்கு இரட்டை ஊதியம் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையின் போது, விடுமுறை நாள் குறித்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தாலும், அம்பேத்கர் பிறந்தநாளுக்கு புதிதாக தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டது என நீதிபதிகள் தெரிவித்தனர். அதன்படி, அம்பேத்கர் பிறந்தநாள் அன்று பணியாற்றியவர்களுக்கு இரட்டை சம்பளம் பெற தகுதியானவர்கள் என நீதிபதி குறிப்பிட்டனர்.
What's Your Reaction?