உரிய ஆவணங்கள் இல்லை – நகருக்குள் சுற்றிவந்த சொகுசு கார் உரிமையாளருக்கு ரூ.9,80,000 அபராதம்

உரிய ஆவணங்கள் இன்றி நகருக்குள் சுற்றிவந்த சொகுசு கார் உரிமையாளருக்கு ரூ.9,80,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் போக்குவரத்து  காவல்த்துறையினர்  சோதனை மேற்கொண்டனர்.அப்பொழுது சந்தை மதிப்பில் சுமார் 2 கோடி மதிப்பிலான  Porsche 911 என்ற சொகுசு காரை மறித்து சோதனை மேற்கொண்டனர்.அப்பொழுது அந்த வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் அந்த வாகனத்தை பறிமுதல் செய்தனர். During a routine checking in Ahmedabad West. Porsche 911 was caught by PSI MB Virja. … Read more

இந்தியாவையே உலுக்கிய பிரியங்கா ரெட்டியின் கொலையில் 'கொடூர' கொலையாளிகள் பிடிபட்டது எப்படி?!

இரண்டு தினங்களுக்கு முன்னர் இந்தியாவையே உலுக்கிய டாக்டர் பிரியங்கா ரெட்டி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஹைதராபாத் – பெங்களூரூ சாலையில் அரங்கேறியது. இந்த கோர சம்பவத்தை நிகழ்த்திய 4 குற்றவாளிகள் தற்போது கைது செய்யப்பட்டு விட்டனர். இந்த எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி ஹைதராபாத் காவல் ஆணையர் சஞ்சனார் கூறுகையில் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். ஷம்ஷாபாத் பகுதியை சேர்ந்த டாக்டர் பிரியங்கா ரெட்டி கொல்லூரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். இவர் எப்போதும் … Read more

இது அதுக்கும் மேல.! திருமணம் செய்வதாக கூறி பிரபல ரவுடியை கைது செய்த பெண் சப் இன்ஸ்பெக்டர்..!

தேடப்பட்டு வந்த பிரபல ரவுடியை திருமண செய்வதாக கூறி புத்திசாலிதனமான கைது செய்யப்பட்ட பெண் இன்ஸ்பெக்ட்டர். உத்திரபிரதேசம் மாநிலம் மஹோபா மாவட்டத்தில் உள்ள பிஜோரி கிராமத்தை சேர்ந்து பால்கிஷன் சவுபே என்பவரின் மீது கொலை மற்றும் கொள்ளை போன்ற 16 வழக்குகள் போடப்பட்டுள்ளதால், போலீசிடம் பிடி படாமல் தப்பித்து வந்துகொண்டிருந்தார். இதனால் அவரை பற்றி தகவல் சொல்லுபவருக்கு காவல்துறை சார்பாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பால்கிஷன் சவுபே ரவுடியின் போன் நம்பரை கண்டுபிடித்த … Read more

திருமண நிகழ்ச்சியில் வீடியோகிராபர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து பலி ..!

பீகார் மாநிலம்  சமஸ்திப்பூர் மாவட்டத்தில் உள்ள ரயில்வே காலனியில் நேற்று முன்தினம் இரவு திருமணம் ஓன்று நடந்து உள்ளது.இந்த திருமண நிகழ்ச்சியில்  திருமண மணப்பெண் வீட்டை சார்ந்த உறவினர்களும் , மணமகன் வீட்டை சார்ந்த உறவினர்களும் பலர் கலந்து கொண்டனர். இந்த திருமண நிகழ்ச்சி கொண்டாட்டத்தின் போது மணமக்கள் உறவினர்களில் ஒருவர் யாரோ துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு எதிர்பாராதவிதமாக திருமண நிகழ்ச்சியில் வீடியோ பதிவு செய்து கொண்டு இருந்த வீடியோகிராபர் மீது … Read more

'செலவுக்கு பணம் தரவில்லை அதனால் அடித்து கொன்றோம்!' சென்னை தொழிற்சாலை முதலாளி கொலையில் திடுக் திருப்பம்!

சென்னை, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஒரு சிறிய பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வந்துள்ளார் பிரபாகரன். இவர், அந்த தொழிற்சாலையை 10 ஆண்டுகளாக நடத்திவந்துள்ளார். இவருக்கு கடந்தாண்டு திருமணம் ஆகி 4 மாத குழந்தை உள்ளது. இவர் எப்போதும் தனது தொழிற்சாலைக்கு வந்த பின் மனைவியிடம் போன் பேசுவது வழக்கம். ஆனால் சமத்துவதன்று அவர் போன் செய்யவில்லை. அன்று இரவு வீட்டிற்கும் வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த பிரபாகரன் வீட்டார். போலீசில் புகார் அளித்தனர். அதன் பின்னர் தொழிற்சாலைக்கு வந்த … Read more

தும்பியின் வாலில் பாறாங்கல்லை கட்டாதீர்கள்! 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யவேண்டும் – மநீம அறிக்கை

5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யுமாறு மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது.  மத்திய அரசு பள்ளிப்படிப்பை படிக்கும் மாணவர்களுக்கு 10,11,12 வகுப்புகள் மட்டுமின்றி 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு இனி நடைபெறும் என்று அறிவித்தது.இதனால்  5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு  அறிவிப்பு வெளியிட்டது.ஆனால் இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியது.அரசியல் கட்சியினர்,கல்வி ஆர்வலர்கள் என பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். இதனிடையே  5, 8ஆம் வகுப்புகளுக்கு  … Read more

தமிழகம் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம்  கூறுகையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று கடலூர் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் … Read more

தந்தை திட்டியதால் ரயில் முன் பாய்ந்த மகன்..!

தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவன் தந்தை திட்டியதால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை. கோவை லெனின் நகரை சேர்ந்த மூர்த்தீஸ்வரன் மரவேலை செய்ந்து வருகிறார். இவரது மகன் அபினேஷ் கணபதி அருகில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்து கொண்டிருக்கிறார். அப்போது நடந்து முடிந்த தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் இதை அறிந்த தந்தை அபினேஷை கண்டித்துள்ளார் இதனால் மனமுடைந்து அபினேஷன் காணப்பட்டார். இந்நிலையில் அபினேஷ்வர் நேற்று மாலை டியூசன் சென்று விட்டு … Read more

குரங்குக்காக நாயை புலியாக மாற்றிய விவசாயி..!

கர்நாடக மாநிலம்  சிவமோகா மாவட்டத்தில் உள்ள நல்லூரு கிராமத்தை சார்ந்தவர் ஸ்ரீகந்த கவுடா.இவர் விவசாயம் செய்து வருகிறார்.இவரது விவசாய நிலையத்தில் குரங்குகள் புகுந்து நாசம் செய்து உள்ளது.என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த ஸ்ரீகந்த கவுடா உத்தரா கன்னடா மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாயி  புலி பொம்மையை  நிலத்தில் வைத்து குரங்குகளை விரட்டியாக கேள்விப்பட்டு உள்ளார். இதை தொடர்ந்து ஸ்ரீகந்த கவுடா தனது நிலத்தில் புலி பொம்மையை  வைத்து உள்ளார். இரண்டு நாள்கள் கழித்து நிலத்தில் பார்த்தபோது புலி … Read more

BREAKING: நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற சிவசேனா..!

மகாராஷ்டிராவின் சிவசேனா -காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பாக முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார்.உத்தவ் தாக்கரே  தலைமையிலான அரசு பதவியேற்ற நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவை பிறப்பித்தார். இன்று மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே அரசு வெற்றி பெற்றது. உத்தவ் தாக்கரே அரசுக்கு தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உட்பட 169 எம்எல்ஏக்கள் வாக்களித்து உள்ளனர். பெருன்பான்மைக்கு 145 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவைப்பட்ட நிலையில் … Read more