உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக தாக்கல் செய்த மனு -பட்டியலிட உச்சநீதிமன்றம் உத்தரவு

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில் விசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது . திமுக சார்பில்  உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில் ,உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன் தொகுதி மற்றும் வார்டு மறுவரையறை இட ஒதுக்கீடு உள்ளிட்ட சட்ட முறையில் பூர்த்தி செய்ய  தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும்  உள்ளாட்சி தேர்தல் பட்டியலை வெளியிட உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. திமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தொடரப்பட்ட … Read more

தொடங்கியது மகராஷ்டிரா சட்டப்பேரவை – பெரும்பான்மையை நிரூபிக்க உள்ள உத்தவ் தாக்கரே அரசு

மகாராஷ்டிராவின் சிவசேனா -காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பாக முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார்.உத்தவ் தாக்கரே  தலைமையிலான அரசு பதவியேற்ற நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவை பிறப்பித்தார். இன்று அவரது அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மகாராஷ்டிர சட்டமன்ற கூட்டம் துவங்கியுள்ளது.இடைக்கால சபாநாயகர் திலீப் பட்டீல் தலைமையில் சட்டமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் பின்பு  நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவணங்களை ஒப்படைக்க பொன்.மாணிக்கவேலுக்கு தமிழக அரசு ஆணை ..!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலை சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிறப்பு அதிகாரியாக நியமித்தது. மேலும் சிறப்பு அதிகாரிக்கு தேவையான வசதிகளையும் , அலுவலகம் மற்றும் போலீஸ் அதிகாரிகளை ஒதுக்கி  தருமாறு  தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது. இவரின் பதவிக்காலம் இன்று உடன் நிறைவடைகிறது.இந்நிலையில் தனது பதவி காலத்தை நீட்டிக்க கோரி  சென்னை உச்சநீதிமன்றத்தில் பொன். மாணிக்கவேல் மனு தாக்கல் செய்தார்.பொன்.மாணிக்கவேலின் பதவி காலத்தை நீட்டிக்க கூடாது என தமிழக … Read more

காதலை ஏற்க மறுத்ததால் பேஸ்புக் காதலனை கடத்தி கொல்ல முயற்சி! காதலியை தேடும் போலீசார்…

பேஸ்புக்கில் ஒருவரை ஒருவர் நேரில் பார்க்காமல் புகைப்படங்கள் மட்டும் பகிர்ந்து கொண்டு காதலித்து வந்த பேஸ்புக் ஜோடிக்கு நேரில் சந்தித்ததும் ஓர் பேரதிர்ச்சி காத்திருந்தது. மும்பையில் வேலை என்ஜினியராக வேலை செய்துவரும் அசோக்  குமார் என்பவர், மலேசியாவை சேர்ந்த அமுதா என்ற பெண்ணும் பேஸ்புக்கில் நட்பாக பழகி புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு இணையத்தில் தங்கள் காதலை வளர்த்துள்ளனர். பின்னர் இருவரும் நேரில் சந்திக்க முடிவெடுத்து, தேனி வந்தனர். இருவரும் நேரில் சந்தித்து கொண்டபோது, அசோக் குமாருக்கு பேரதிர்ச்சி … Read more

AUS VS PAK டெஸ்ட் தொடர்- முச்சதம் விளாசிய டேவிட் வார்னர்..!

கடந்த நவம்பர் 3-ம் தேதி பாக்கிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டி விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 21-ம் தேதி தொடங்கியது. அதில் ஆஸ்திரேலியா அணி அபாரமாக விளையாடி முதல் போட்டியை கைப்பற்றியது. நேற்று இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட் மைதானத்தில் விளையாடினர். அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. டேவிட் வார்னரும், பர்னிஸும் தொடக்க ஆட்டக்காரர்களான களமிறங்கினார்கள் அப்ரிடி பந்து … Read more

ஏன் குற்றவாளிகளை தூக்கிலிடக் கூடாது? பிரியங்காரெட்டி மரணம் குறித்து ஹர்பஜன் சிங் ஆவேசம்

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றிய பிரியங்கா ரெட்டி.இவரது உடல் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.இது குறித்து தெலுங்கானா மாநில காவல்த்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.குறிப்பாக  வலைத்தளமான ட்விட்டரில்  #RIPPriyankaReddy, #JusticeForPriyankaReddy என்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகிறது. Shame on all of us we keep letting these things happens again nd again butnothing change.y … Read more

#BREAKING :  தமிழக புதிய உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்

 தமிழக புதிய உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  நெடுஞ்சாலை  மற்றும் சிறு துறைமுகங்கள் செயலராக இருந்தவர் எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் . பொதுப்பணித்துறை செயலாளராகவும் பணியாற்றியவர் எஸ்.கே.பிரபாகர். நிரஞ்சன்  மார்டி ஒய்வு பெற்றதை அடுத்து  தமிழக அரசின் புதிய உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

வரலாற்றில் இன்று (30.11.2019) எம். ஜி. ஆர் மனைவியின் பிறந்த நாள்

கேரளா மாநிலத்தில் உள்ள திருவாங்கூர் தனியரசிற்கு உட்பட்ட வைக்கம் என்னும் ஊரில் வாழ்ந்த நாயர் குலத்தைச் சேர்ந்த நாணி என்னும் நாராயணம்மாவிற்கு 1923 -ம்  ஆண்டு நவம்பர் 30-ம் நாள் ஜானகி பிறந்தார்.இவருக்கு மணி என்ற நாராயணன் என்னும் தம்பி இருந்தார். வைக்கம் நாராயணி ஜானகி என்னும் வி. என். ஜானகி முன்னாள் திரைப்பட நடிகை , முன்னாள் தமிழக முதல்வர் பிரபல நடிகரும் முன்னாள் தமிழக முதல்வருமாகிய எம். ஜி. இராமச்சந்திரனுக்கு மூன்றாவது மனைவி ஆவார். … Read more

மோட்டோவின் அடுத்த படைப்பு.. பாப்-அப் செல்பி கேமரா மொபைல்..!

ஒப்போ, விவோ, ரெட்மி, ரியல்மீ, ஒன் பிளஸ் இத்தகைய மொபைல்களை தொடர்ந்து, தற்பொழுது மோட்டோரோலா நிறுவனம் தனது ஸ்மார்ட் போனில் பாப்-அப் செல்பி கேமராவை அறிமுகம் செய்துள்ளது. இந்த வகையான மொபைலுக்கு அந்நிறுவனம் “மோட்டோரோலா ஒன் ஹைப்பர்” என பெயரிட்டுள்ளது. இந்த மோட்டோரோலா ஹைப்பர் மொபைலானது, டிசம்பர் 3ஆம் தேதி பிரேசிலில் நடக்கும் விழாவில் அறிமுகம் செய்யவுள்ளது. ஆனால், இந்த மொபைலை பற்றிய பல தகவல்கள் இணையத்தில் வெளியானது. அதில் முக்கியமானவை, விவோ v15 ஐ போல … Read more

அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ராதாரவி

சமீபத்தில் அதிமுகவில் இணைந்த ராதாரவி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். ராதாரவி வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் இரண்டும் நடித்தும் பிரபலமானவர் ஆவார்.இவர் அரசியலிலும் தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.இதில் ஒரு படியாக ராதா ரவி கடந்த 2001 ஆம் ஆண்டு அதிமுக சார்பாக சைதாப்பேட்டை  சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ஆவார். அவரது பதவி காலம் முடிந்ததும் சிறிது காலம் அதிமுகவில் இருந்தார்.பின்னர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் திமுகவில் இணைந்தார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு  முன்பாக நடிகை … Read more