உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக தாக்கல் செய்த மனு -பட்டியலிட உச்சநீதிமன்றம் உத்தரவு

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில் விசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .
திமுக சார்பில்  உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில் ,உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன் தொகுதி மற்றும் வார்டு மறுவரையறை இட ஒதுக்கீடு உள்ளிட்ட சட்ட முறையில் பூர்த்தி செய்ய  தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும்  உள்ளாட்சி தேர்தல் பட்டியலை வெளியிட உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
திமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று  உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.இந்த நிலையில்  திமுக மனு மீது  2 வாரங்கள் கழித்து விசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .