BREAKING: நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற சிவசேனா..!

மகாராஷ்டிராவின் சிவசேனா -காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பாக முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார்.உத்தவ் தாக்கரே  தலைமையிலான அரசு பதவியேற்ற நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவை பிறப்பித்தார்.
இன்று மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே அரசு வெற்றி பெற்றது. உத்தவ் தாக்கரே அரசுக்கு தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உட்பட 169 எம்எல்ஏக்கள் வாக்களித்து உள்ளனர்.
பெருன்பான்மைக்கு 145 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவைப்பட்ட நிலையில் 169 எம்எல்ஏக்கள் உத்தவ் தாக்கரே அரசுக்குவாக்களித்து உள்ளனர்.

author avatar
murugan