#Breaking:சற்று முன்…நம்பிக்கை வாக்கெடுப்பு – மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வெற்றி!

மகாராஷ்டிராவில் நிலவும் பரபரப்பான சூழலுக்கு மத்தியில் உத்தவ் தாக்கரேவின் ராஜினாமாவை தொடர்ந்து,ஏக்நாத் ஷிண்டே அம்மாநில புதிய முதல்வராக பதவியேற்றார்.இந்த வேளையில்,மகாராஷ்டிராவில் தற்போது நடைபெற்று வரும் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் ஏக்நாத் ஷிண்டேவின் புதிய அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்நிலையில்,மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் சிண்டே தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது.சட்டமன்றத்தின் பலம் 288 ஆக உள்ள நிலையில், பெரும்பான்மைக்கு 145 வாக்குகள் தேவைப்பட்டது.அதன்படி,நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டேவின் புதிய அரசுக்கு 164 … Read more

பரபரப்பான சூழல்…இன்று பெரும்பான்மையை நிரூபிப்பாரா மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே?..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியதை தொடர்ந்து, உத்தவ் தாக்கரே சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து,மகாராஷ்டிராவில் நிலவும் பரபரப்பான சூழலுக்கு மத்தியில் உத்தவ் தாக்கரேவின் ராஜினாமாவை தொடர்ந்து,ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா மாநில முதல்வராக பதவியேற்றார்.மேலும்,பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக பதவியேற்றார். இந்த சூழலில்,மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் இரண்டு நாள் சிறப்பு … Read more

மகாராஷ்டிரா சட்டப்பேரவை : சபாநாயகராக போட்டியின்றி தேர்வாகிறார் காங்கிரஸ் வேட்பாளர்

மகாராஷ்டிராவில் சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் நானா பட்டோலே போட்டியின்றி தேர்வாகிறார். காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் – சிவசேனா என்ற மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.இந்த கூட்டணியின் சார்பாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார். முதலில் பாஜகவின் இடைக்கால சபாநாயகரை நியமிக்கப்பட்ட காளிதாஸ் கொலம்ப்கர் புதிய எம்எல்ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.பின்னர் முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்ற நிலையில்  சட்டசபையின்  தற்காலிக சபாநாயகராக தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ  திலீப் வல்சே பாட்டீல் … Read more

தொடங்கியது மகராஷ்டிரா சட்டப்பேரவை – பெரும்பான்மையை நிரூபிக்க உள்ள உத்தவ் தாக்கரே அரசு

மகாராஷ்டிராவின் சிவசேனா -காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பாக முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார்.உத்தவ் தாக்கரே  தலைமையிலான அரசு பதவியேற்ற நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவை பிறப்பித்தார். இன்று அவரது அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மகாராஷ்டிர சட்டமன்ற கூட்டம் துவங்கியுள்ளது.இடைக்கால சபாநாயகர் திலீப் பட்டீல் தலைமையில் சட்டமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் பின்பு  நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.