அடுத்த ஜல்லிகட்டுக்கு தயாராகுங்கள் ..! மீண்டும் காவிரிக்கு ஒன்றிணைய அழைக்கும் தம்பிதுரை …!

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை காவிரி விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் கொண்டு வந்தால், அதிமுக ஆதரிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, ஜல்லிக்கட்டு போராட்டம் போல் மக்கள் மீண்டும் காவிரிக்கு ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

ஏப்ரல் 11-ல் மத்திய அரசை கண்டித்து கடையடைப்பு போராட்டம்…!

தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககாத மத்திய அரசை கண்டித்து ஏப்ரல் 11-ல் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று  அறிவித்துள்ளார். ஏப்ரல் 11-ல் தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஏப்ரல் 11-ல் தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

தமிழக அரசின் நிலைப்பாடும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பது தான்…!

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்  ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பது தான் தமிழக அரசின் நிலைப்பாடு என தெரிவித்துள்ளார். இன்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர், “ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்திலே ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என அரசு நடவடிக்கை எடுத்தது. ஜெயலலிதா எடுத்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் அரசுக்கு இல்லை. ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பது தான் அரசின் நிலைப்பாடு. மேலும் ஸ்டெர்லைட் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு … Read more

ரஜினிக்கு பதில் கூறிய ஸ்டெர்லைட் நிர்வாகம் எனக்கும் பதில் சொல்லட்டும்…!கமல்ஹாசன் ஸ்டெர்லைட்டுக்கு சவால் …!

ரஜினிக்கு பதில் கூறிய ஸ்டெர்லைட் நிர்வாகம் எனக்கும் பதில் சொல்லட்டும்  என  மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தெரிவித்தார். இதற்கு முன்  ட்விட்டரில் கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் ட்விட்டரில் பதில் அளித்துள்ளது. இதற்கு முன் நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் குறித்து நடவடிக்கை எடுக்காமல் அரசு வேடிக்கை பார்ப்பது புரியாத புதிராக உள்ளது என்று தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் … Read more

பிரதமர் நரேந்திர மோடி ஈஸ்டர் கொண்டாடும் கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து….!

பிரதமர் நரேந்திர மோடி  ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இயேசுநாதர் உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும், கிறிஸ்தவ மக்களால் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ஒற்றுமை, அமைதி மற்றும் சகோதரத்துவத்திற்கு வலிமை கூட்டும் சிறந்த நாள் என்பதை நம்புவதாக கூறியுள்ளார். இயேசு பிரானின் புனித எண்ணங்களும், கொள்கைகளும் சமுதாயத்திற்கு பல்வேறு நேர்மறை சேவைகளை செய்ய மக்களை ஊக்கப்படுத்தும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். … Read more

தமிழகம் முழுவதும் சூடு பிடிக்கும் திமுகவினர் போராட்டம் ..!ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்துபோராட்டம்…!

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகத்தில் ஆங்காங்கே திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் பேருந்து நிலையம் நோக்கி பேரணியாக வந்த திமுகவினர், தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன், முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். காஞ்சிபுரம் – செங்கல்பட்டு சாலையில் பெரியார் தூண் அருகே சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் தலைமையில் மறியலில் … Read more

மத்திய அரசு காவிரி மேலாண்மை விவகாரத்தில் வேண்டும் என்றே காலம் தாழ்த்துவதை ஏற்க முடியாது…!

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்  காவிரி மேலாண்மை விவகாரத்தில் மத்திய அரசு வேண்டும் என்றே காலம் தாழ்த்துவதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார். சென்னை பட்டாளத்தில் ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி நடைபெற்ற விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஜெயக்குமார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆட்சியில் இருந்த போது காவிரி விவகாரத்தில் திமுக மவுனமாக இருந்து விட்டு, இப்போது நாடகமாடுவதாக குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டின் உரிமைக்காக நடத்தப்படும் எந்தப் போராட்டத்தையும் கொச்சைப் படுத்தக் கூடாது என்று தெரிவித்த  … Read more

இருவேறு இடங்களில் ஜம்மு-காஷ்மீரில் 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை…!

8 தீவிரவாதிகளை  ஜம்மு காஷ்மீரில் மூன்று இடங்களில் நடைபெற்ற சண்டையில் பாதுகாப்புப் படை சுட்டுக் கொன்றது. இந்தச் சண்டையில் பாதுகாப்புப் படை வீரர்கள் இருவரும், பொதுமக்களில் இருவரும் உயிரிழந்தனர். அனந்த்நாக் மாவட்டம் டயல்காம் ((Dialgam)), சோபியான் மாவட்டம் கச்தூரா ((kachdoora)), டிராகத் ((dragad)) ஆகிய பகுதிகளில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அந்தப் பகுதிகளை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். இந்த மூன்று இடங்களிலும் தீவிரவாதிகள் – பாதுகாப்புப் படையினர் இடையே கடும் துப்பாக்கிச் … Read more

நெல்லையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்ட கனிமொழி உள்ளிட்ட அனைத்துக்கட்சியினர் கைது…!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நெல்லையில் சாலை மறியலில் ஈடுபட்ட கனிமொழி உள்ளிட்ட அனைத்துக்கட்சியினர் கைது செய்யபட்டனர். இதற்கு முன்  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திமுகவினர் மற்றும் எதிர் கட்சியினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சற்று முன் வரும் 5-ம் தேதி தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. காவிரி பிரச்னையில் அடுத்தகட்ட … Read more

கமல்,ரஜினியை தூக்கியெறிந்த ஸ்ருதி..!இதுல ஸ்ருதி தான் டாப் ..!

ஸ்ருதிஹாசன் சில மாதங்களாகவே எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை. அவரது கால்ஷீட் டைரி காலியாகவே உள்ளது. படங்களில் ரொமான்ஸ் செய்து வந்த அவர் இப்போது நிஜமான ரொமான்ஸ் மூடில் இருந்து வருகிறார். படங்களில் ரொமான்ஸ் செய்து வந்த அவர் இப்போது நிஜமான ரொமான்ஸ் மூடில் இருந்து வருகிறார்.இவரது காதலுக்கு அப்பா கமல் எப்போதோ சம்மதம் தெரிவித்துவிட்டார். எனவே திருமணத்திற்கு தடைகள் இல்லை. இந்நிலையில்  நடிகை ஸ்ருதி ஹாஸனுக்கு ட்விட்டரில் ஏராளமான ரசிகர்கள், ரசிகைகள் பின் தொடர்ந்து வருகின்றனர். இதில் … Read more