விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழப்பு!

crackers factory accident

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்து வெம்பக்கோட்டை அருகே ராமு தேவன்பட்டியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த 5 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் என 8 பேர் நிகழ்விடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். கரும்பு விவசாயி சின்னத்துக்கு சிக்கல்? வழக்கு தொடர முடிவு – சீமான் பரபரப்பு பேட்டி! இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து … Read more

வரலாறு காணாத கனமழையால் தென் மாவட்ட ரயில்கள் ரத்து..!

தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய மழை தொடர்ந்து தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெய்து வருகிறது. இந்நிலையில், நெல்லை- தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் தென் மாவட்டங்களுக்கு வரக்கூடிய 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நிஜாமுதீன்- குமரி விரைவு ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. முத்துநகர் ரயில் கோவில்பட்டியில் நிறுத்தப்பட்டுள்ளது. நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயில்  இரு மார்க்கத்திலும் ரத்து … Read more

மேலும் 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி 4 ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. பின்னர் ரெட் அலர்ட் காரணமாக  தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக தேனி, சிவகங்கை, ராமநாதபுரம்,  மற்றும் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு … Read more

#BREAKING: திமுக முப்பெரும் விழா கோலாகலமாக தொடங்கியது!

விருதுநகரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் நிர்வாகிகளுக்கு விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் தலைமையில் விருதுநகரில் திமுக முப்பெரும் விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. விருதுநகர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பட்டம்புதூரில் பிரமாண்டமாக திமுக முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது. சிறப்பாக செயல்பட்ட நிர்வாகிகளுக்கு தலைவர்கள் பெயரில் விருதுகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி வருகிறார். சம்பூர்ணம் சுவாமிநாதனுக்கு பெரியார் விருது மற்றும் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொற்கிழியையும் வழங்கி கவுரவித்தார் … Read more

#BREAKING: பட்டாசு விதிமீறல்! சிறப்பு ஆய்வுக்குழு நியமனம் – மாவட்ட ஆட்சியர்

தொடர்ந்து விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை. விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு விதிமுறை மீறல்களை கண்டறிய சிறப்பு ஆய்வுக்குழுவை நியமித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். தொடர்ந்து விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். வரும் 25-ஆம் தேதி வரை தினசரி ஆய்வு நடத்தி விதிமுறைகள் மீறல்களை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் … Read more

வெடி விபத்து; உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர்!

வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவியை அறிவித்தார் முதலமைச்சர். விருதுநகர் மாவட்டத்தில் வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவியை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், கீழாண்மறைநாடு கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் நேற்று பிற்பகல் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் தென்காசி மாவட்டம், வீரணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் (வயது 35) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த … Read more

இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை – 680 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!

விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 680 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல். விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 680 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்டுள்ளது. ஹரிஹரன் உள்பட 4 பேர் தொடர்பான 440 பக்க குற்றப்பத்திரிகை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் பள்ளி மாணவர்கள் 4 பேர் தொடர்பாக 240 பக்க குற்றப்பத்திரிகை விருதுநகர் இளம்சிறார் குழுமத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் … Read more

#BREAKING: பட்டாசு ஆலை வெடிவிபத்து – மேலாளர் கைது

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் அரவிந்த் என்பவர் இறந்த நிலையில், ஆலையின் மேலாளர் ராஜேந்திரன் கைது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மாரனேரி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். செல்வஜோதி பயர் ஒர்க்ஸ் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் அறை தரைமட்டமாகிய நிலையில், மாதன்கோவில்பட்டியைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து, சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த அரவிந்த் என்பவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் … Read more

பட்டாசு ஆலை வெடி விபத்து.. ரூ.3 லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன் என முதலமைச்சர் அறிவிப்பு. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மாரனேரி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். செல்வஜோதி பயர் ஒர்க்ஸ் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் அறை தரைமட்டமாகிய நிலையில், ஒருவர் பலியானார்.  இந்த நிலையில், சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த அரவிந்த் (32) என்பவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் … Read more

#BREAKING: பட்டாசு ஆலை வெடி விபத்து – ஒருவர் பலி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மாரனேரி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். செல்வஜோதி பயர் ஒர்க்ஸ் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் அறை தரைமட்டமாகிய நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.