விஜய பிரபாகரன் எனக்கும் மகன் மாதிரி தான் – பாஜக வேட்பாளர் ராதிகா சரத் குமார்!

Radhika Sarathkumar

Radhika Sarathkumar : விஜய பிரபாகரன் எனக்கு ஒரு மகன் மாதிரி என்று விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத் குமார் கூறியுள்ளார். மக்களவை தேர்தலுக்கான அட்டவணை வெளியானதை தொடர்ந்து, அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்தவகையில், வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு, நடிகர் சரத் குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பாஜகவுடன் இணைந்தது. இதையடுத்து, விருதுநகரில் பாஜக சார்பில் சரத்குமாரின் மனைவியும், நடிகையுமான ராதிகா மக்களவை தேர்தலுக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். … Read more

பட்டாசு ஆலை வெடி விபத்து – முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!

mk stalin

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டை அருகே ராமு தேவன்பட்டியில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில், ஆலையில் பணியில் ஈடுபட்டு வந்த 5 பெண்கள் உள்ளிட்ட 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், 5க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கர வெடி விபத்தால் ஆலையில் உள்ள 4 அறைகள் தரைமட்டமாகின. விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் … Read more

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழப்பு!

crackers factory accident

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்து வெம்பக்கோட்டை அருகே ராமு தேவன்பட்டியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த 5 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் என 8 பேர் நிகழ்விடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். கரும்பு விவசாயி சின்னத்துக்கு சிக்கல்? வழக்கு தொடர முடிவு – சீமான் பரபரப்பு பேட்டி! இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து … Read more

தூத்துக்குடியில் மழை… அடுத்த 3 மணிநேரத்தில் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!

Rain in Tamilnadu

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரையில் ஒரு சில இடங்களில் மீதமானது முதல் லேசான சாரல் மழை வரை பெய்தது. குறிப்பாக தூத்துக்குடி மாநகரத்தில் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. வணிக சிலிண்டர் விலை 12.50 ரூபாய் உயர்வு.! பிப்ரவரி மாதம் பருவம் தவறி பெய்து வரும் மழை காரணமாக தூத்துக்குடியில் உப்பள தொழில் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மதம் முதல் தான் உப்பு விளைச்சல் நன்றாக ஆரம்பமாகும் காலம் … Read more

மேலும் 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி 4 ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. பின்னர் ரெட் அலர்ட் காரணமாக  தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக தேனி, சிவகங்கை, ராமநாதபுரம்,  மற்றும் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு … Read more

விருதுநகர் அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.! 150 பேர் சிக்கி தவிப்பு.!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அய்யனார் கோவில் காட்டாட்ற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் கோவிலுக்கு சென்ற 150க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.  தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல்வேறு நீர்நிலைகளில் நீர் நிரம்பி வருகிறது. இதனால் அந்தந்த மாவட்ட நிர்வாகம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் எனும் ஊரில் அய்யனார் கோவில் காட்டாட்ற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால்,  கோவிலுக்கு சென்ற 150க்கும் … Read more

அடுத்த 3 மணிநேரத்தில் தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை.! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

தென் தமிழக மாவட்டங்களாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, மதுரை,விருதுநகர்,தென்காசி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் சில தினங்களில் தொடங்கும் நிலையில் அதற்கு முன்னதாகவே வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என … Read more

விருதுநகர் பாலியல் வழக்கு- ஹரிகரனிடம் சிபிசிஐடி விசாரணை…!

விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஹரிகரனிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகரில் பட்டியலின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஹரிஹரன், ஜுனைத் அகமத், மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டுள்ள 8 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. கைது செய்யப்பட்ட சிறுவர்கள் 4 பேரும் ராமநாதபுரம் கூர்நோக்கு இல்லத்திலும், மற்ற 4 பேர் … Read more

விருதுநகர் வன்கொடுமை 30 பேரை விசாரிக்க திட்டம்..!

விருதுநகர் இளம் பெண் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேரின் நண்பர்களான 30 பேரை விசாரிக்க சிபிசிஐடி திட்டமிடப்பட்டுள்ளது. விருதுநகரில் தனியார் ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண்ணை ஹரிஹரன் என்பவர் காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணுடன் தனிமையில் இருந்ததை வீடியோவாக ஹரிஹரன் எடுத்துள்ளார். பின்னர், ஹரிஹரன் அந்த வீடியோவை தனது நண்பர்களுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. அந்த வீடியோவை அவரகள் சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவதாக கூறி அப்பெண்ணை பலமுறை வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், ஹரிஹரன் உட்பட … Read more

#BREAKING: இளம்பெண் பாலியல் வன்கொடுமை- 6 நாள் விசாரிக்க அனுமதி ..!

விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 பேரை 6 நாள்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.  விருதுநகரில் தனியார் ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண்ணை ஹரிஹரன் என்பவர் காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணுடன் தனிமையில் இருந்ததை வீடியோவாக ஹரிஹரன் எடுத்துள்ளார். பின்னர், ஹரிஹரன் அந்த வீடியோவை தனது நண்பர்களுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. அந்த வீடியோவை அவரகள் சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவதாக கூறி அப்பெண்ணை பலமுறை வன்கொடுமை … Read more