இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை – 680 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!

விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 680 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்.

விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 680 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்டுள்ளது. ஹரிஹரன் உள்பட 4 பேர் தொடர்பான 440 பக்க குற்றப்பத்திரிகை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் பள்ளி மாணவர்கள் 4 பேர் தொடர்பாக 240 பக்க குற்றப்பத்திரிகை விருதுநகர் இளம்சிறார் குழுமத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு குற்றப்பத்திரிகையையும் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர்.

இதனிடையே, விருதுநகர் ரோசல்பட்டியை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணை 8 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த மார்ச் மாதம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் ஹரிஹரன், பர்மா காலனி சேர்ந்த ஜூனத்அகமது, பிரவீன், மாடசாமி மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் உள்பட 8 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஹரிஹரன், ஜூனத் அகமது, பிரவீன், மாடசாமி ஆகிய 4 பேர் மதுரை மத்திய சிறையிலும், பள்ளி மாணவர் 4 பேரும் மதுரை கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர். இதன்பின் அவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து 4 மாணவர்களையும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டது. இந்நிலையில், இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 680 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்டுள்ளது என்பதுய குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment