விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழப்பு!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்து வெம்பக்கோட்டை அருகே ராமு தேவன்பட்டியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த 5 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் என 8 பேர் நிகழ்விடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

கரும்பு விவசாயி சின்னத்துக்கு சிக்கல்? வழக்கு தொடர முடிவு – சீமான் பரபரப்பு பேட்டி!

இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த வெடி விபத்தை அடுத்து வெம்பக்கோட்டையில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து, தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த வெடி விபத்தால் ஆலையில் உள்ள 4 அறைகள் தரைமட்டமாகின எனவும் தெரிவிக்கப்படுகிறது. அறையில் வெடிமருந்து கலக்கும்போது உராய்வு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment