#BREAKING: திமுக முப்பெரும் விழா கோலாகலமாக தொடங்கியது!

விருதுநகரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் நிர்வாகிகளுக்கு விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் தலைமையில் விருதுநகரில் திமுக முப்பெரும் விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. விருதுநகர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பட்டம்புதூரில் பிரமாண்டமாக திமுக முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது. சிறப்பாக செயல்பட்ட நிர்வாகிகளுக்கு தலைவர்கள் பெயரில் விருதுகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி வருகிறார்.

சம்பூர்ணம் சுவாமிநாதனுக்கு பெரியார் விருது மற்றும் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொற்கிழியையும் வழங்கி கவுரவித்தார் முதலமைச்சர். பள்ளி நாட்கள் தொடங்கி திமுகவில் இணைத்துக்கொண்டு சிறப்பாக பணியாற்றிய கோவை இரா.மோகனுக்கு அண்ணா விருது வழங்கப்பட்டது. இரா.மோகன் உடல்நலம் குன்றி வீட்டில் இருப்பதால் அவர் சார்பில் அவரது மகன் விருதை பெற்றுக்கொண்டார். மேலும் திமுக பொருளாளர்  டிஆர் பாலுக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment