#Breaking : 1000 ரூபாய் பொங்கல் பரிசு தொகை.! தமிழக அரசு அறிவிப்பு .!

பொங்கல் பரிசாக 1000 ரூபாய் ரொக்க பணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு. அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் குடியிருப்போருக்கு வரும் 2023 பொங்கல் பரிசாக 1000 ரூபாய் ரொக்கப்பணம் , 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை ஆகியவை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த பொங்கல் பரிசானது ஜனவரி 2ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் … Read more

பொங்கல் சிறப்பு தொகுப்பு பெறாதவர்கள் இன்று காலை முதல் பெறலாம் …!

பொங்கல் சிறப்பு தொகுப்பு பெறாதவர்கள் இன்று காலை முதல் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் பொங்கல் முடிவடைந்த பின்பும் பொங்கல் தொகுப்பை பெறாதவர்கள் இன்று காலை முதல் பெற்றுக்கொள்ளலாம் என கூட்டுறவு சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜனவரி 17ஆம் தேதி காலை 7 மணி முதல் சென்னை தெற்கு மண்டல கட்டுப்பாட்டிலுள்ள நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டு … Read more

பொங்கல் முடித்து ஊர் திரும்புவோருக்காக 16,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!

பொங்கல் முடித்து ஊர் திரும்புவோருக்காக 16,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம். அந்த வகையில் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு வசதியாக கடந்த 11 ஆம் தேதியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்த பேருந்துகளில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட்டுள்ளதால், நாளை முதல் பண்டிகை முடித்து ஊர் திரும்புவோருக்காக16 … Read more

தொடங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு!சிறந்த வீரருக்கு பரிசு என்ன தெரியுமா?!

மதுரை:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தற்போது தொடங்கியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று மதுரை அவனியாபுரத்தில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.இதில் 24 காளைகளை அடக்கி முதல் பரிசான காரை கார்த்திக் என்பவர்  தட்டிச் சென்றார். இந்நிலையில்,புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தற்போது தொடங்கியுள்ளது.தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்த நிலையில்,தற்போது முதல் காலியாக மகாலிங்கசுவாமி மடத்து … Read more

முதல்வர் வீட்டிற்கு நேரில் சென்று பொங்கல் வாழ்த்து தெரிவித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் ….!

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் முதல்வர் வீட்டிற்கு நேரில் சென்று பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வெகு விமரிசையாக இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். தற்பொழுதும் இவர் தமிழக முதல்வர் … Read more

குடும்பத்துடன் பொங்கல் வைத்து கொண்டாடிய சூர்யா …..!

நடிகர் சூர்யா அவரது குடும்பத்துடன் பொங்கல் வைத்து கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல்வேறு தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள்  தங்கள் இல்லங்களில் கோலாகலமாக பொங்கல் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா அவர்களும் அவரது மனைவி மற்றும் சகோதரருடன் இணைந்து பொங்கல் கொண்டாடி உள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய கேப்டன் விஜயகாந்த் – வைரல் புகைப்படம் உள்ளே ….!

கேப்டன் விஜயகாந்த் அவர்கள் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நாடு முழுவதும் இன்று பொங்கல் திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு பிரபலங்கள் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், மக்கள் மனதில் இன்பம் பொங்கிட, விவசாயிகள் வாழ்வில் துயர் நீங்கிட, உலகெங்கும் வாழ்கின்ற தமிழக மக்கள் … Read more

பொங்கல் வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட்..!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இன்று நாடு முழுவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘தமிழகத்தின் எழுச்சி மிக்க கலாச்சாரத்தின் அடையாளமாக பொங்கல் திகழ்கிறது. இந்த சிறப்பு வாய்ந்த நாளன்று அனைவருக்கும் குறிப்பாக உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்துக்கள். இயற்கையுடன் நமது பிணைப்பும் நமது சமூகத்தின் … Read more

பொங்கல் வாழ்த்து தெரிவித்த கேரளா முதல்வர்..!

கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை, மக்கள் அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாடி வரும் நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘இந்தப் பொங்கல் திருநாளில், இன்பமும் அன்பும் நிறைந்து, சமத்துவம் நிறைந்ததோர் உலகம் உருவாக அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்.’ என பதிவிட்டுள்ளார். இந்தப் பொங்கல் திருநாளில், இன்பமும் அன்பும் நிறைந்து, … Read more

#Breaking:தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி…தடுப்பூசி கட்டாயம்!

மதுரை:பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி,அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி,அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் சிறிது நேரத்திற்கு முன்னதாக தொடங்கியது.இதில் 700 காளைகள்,300 வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றதையடுத்து,மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் ,நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் … Read more