#Breaking : 1000 ரூபாய் பொங்கல் பரிசு தொகை.! தமிழக அரசு அறிவிப்பு .!

பொங்கல் பரிசாக 1000 ரூபாய் ரொக்க பணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் குடியிருப்போருக்கு வரும் 2023 பொங்கல் பரிசாக 1000 ரூபாய் ரொக்கப்பணம் , 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை ஆகியவை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த பொங்கல் பரிசானது ஜனவரி 2ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர் எனவும், 2,356 கோடி ரூபாய் இதற்காக தமிழக அரசு ஒதுக்கியுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment