பல்வேறு தடைகளை தகர்த்து ஜல்லிக்கட்டை மீட்டது திமுக.! முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.!

MK Stalin - Alanganallur Kilakarai Jallikattu stadium

இன்று  மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள கீழக்கரை கிராமத்தில் வகுத்தமலை அடிவாரத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சுமார் 5000 பேர் ஒரே இடத்தில் அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை காணும் வகையில் 66 ஏக்கரில் பிரமாண்டமாக இந்த ஜல்லிக்கட்டு மைதானம் அமைந்துள்ளது. இந்த பிரமாண்ட மைதானத்தை முதல்வர் திறந்து வைத்த பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் விழா மேடையில் உரையாற்றினார். அவர் பேசுகையில், ஜல்லிக்கட்டை … Read more

கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் மைதானத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

Jallikattu

தமிழரின் வீரவிளையாட்டு போட்டியாக கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டியானது ஆண்டுதோறும் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஆனால் அங்கு பார்வையாளர்கள் பார்க்கும்படியான வசதிகள் முழுமையாக இல்லை. இதனால்,  பார்வையாளர்களை கருத்தில் கொண்டு அனைவரும் பார்க்கும்படியாக பிரமாண்ட ஜல்லிக்கட்டு மைதானத்தை அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் வகுத்தாமலை அடிவாரத்தில் தமிழக அரசு பிரமாண்டமான ஜல்லிக்கட்டு மைதானத்தை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு, 44 கோடி ரூபாயில் 66 ஏக்கர் பரப்பளவில் கட்டி முடித்தது. … Read more

வாடிவாசல் ரெடி.! கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்க ஜல்லிக்கட்டு போட்டி இன்னும் சில மணி துளிகளில்…

Kalaignar Century Jallikattu Maidan

தமிழரின் வீரவிளையாட்டுகளில் முக்கியமான ஒன்றாக போற்றப்படும் ஜல்லிக்கட்டு போட்டியானது ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக புகழ் பெற்றவை. ஆனால் அங்கு பாரம்பரியமாக போட்டிகள் நடத்த இடம் இருந்தாலும், பார்வையாளர்கள் அனைவரும் வந்து பார்க்கும்படியான இடவசதி இல்லை. திட்டம் : பார்வையாளர்களை கருத்தில் கொண்டு கடந்த 2022ஆம் ஆண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , அலங்காநல்லூர் … Read more

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முறைகேடு.? கலெக்டரிடம் புகார் அளித்த மாடுபிடி வீரர்.!

Abi Siddhar - Alanganallur Jallikattu 2024

கடந்த ஜனவரி 17ஆம் தேதி உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் 18 காளைகளை அடக்கிய மதுரை மாவட்டம் கருப்பாயூரணி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு 17 காளைகளை அடக்கிய சிவகங்கை மாவட்டம் பூவந்தியை சேர்ந்த அபி சித்தர் என்ற மாடுபிடி வீரருக்கு வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. கீழக்கரை ஜல்லிக்கட்டு – … Read more

கீழக்கரை ஜல்லிக்கட்டு – இன்று முன்பதிவு தொடக்கம்.!

jallikattu stadium

மதுரை மாவட்டம் கீழக்கரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகள், மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கி நாளை வரை நடைபெறவுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டு போட்டிகளில் ஒன்றாக கருதப்படுவது ஜல்லிக்கட்டு போட்டி. அதன்படி, இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டாலும், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதி ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை. இந்த நிலையில், தமிழக அரசு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதி … Read more

650 காளைகளும், 350 காளையர்களும்.. விறுவிறுப்பாக தொடங்கிய புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு!

puthukottai jallikattu

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமர்சியாக நடைபெறும். அந்தவகையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு இம்மாதம் தொடக்கம் முதலே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக, தமிழகத்திலேயே அதிக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டமாக புதுக்கோட்டை உள்ளது. அதன்படி, இந்தாண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆங்காங்கே பல பகுதிகளில் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகின்றன. இந்தாண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டையில் தச்சங்குறிச்சியில் கடந்த ஜன.6ம் தேதி தொடங்கி … Read more

அலங்காநல்லூர் – கீழக்கரை ஜல்லிக்கட்டு.! மதுரை மாநகராட்சி நிர்வாகம் முக்கிய அறிவிப்பு.!

Alanganallur Kilakarai jallikatu Ground

தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டு போட்டிகளில் ஒன்றாக கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டியானது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டாலும், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதி ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை. ஆனால், இந்த இடங்களில் மாடுபிடி வீரர்களுக்கும் , ஜல்லிக்கட்டு மாடுகளை வாடிவாசலில் விட்டு வெளியே பிடிப்பதற்கும் போதிய இடங்கள் இருந்தாலும், பார்வையாளர்கள் அனைவரும் முறையாக அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகளை காணும்படி வசதி அமைந்து இருக்காது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மதுரை … Read more

புதுக்கோட்டையில் மஞ்சுவிரட்டு போட்டி நடத்த அனுமதியில்லை.! ஆட்சியர் உத்தரவு.!

Manjuvirattu 2024 Pudukottai

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக்த்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா ரேஸ் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய வீர விளையாட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இதில் ஜல்லிக்கட்டு போட்டிகள் என்பது வாடிவாசல் வழியாக வரிசையாக ஒவ்வொரு ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்துவிடப்படும். அதனை வாடிவாசல் அருகே மாடுபிடி வீரர்கள் பிடிப்பார்கள். சிவகங்கை மஞ்சுவிரட்டு போட்டியில் மேலும் ஒருவர் பலி!  இதில் மாடுகள் பிடிபட்டால் வீரர்கள் வெற்றி என்றும் , மாடு பிடிபடவில்லை என்றால் மாடு வெற்றிபெற்றது என்றும் அறிவிக்கப்படும். … Read more

மஞ்சுவிரட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

M. K. Stalin

நேற்று (ஜனவரி 17) சிவகங்கை மாவட்டம் சிராவயல் என்கிற கிராமத்தில் ஜல்லிக்கட்டு போன்ற மஞ்சுவிரட்டு போட்டி தொடங்கி  நடைபெற்றது. இந்த போட்டியின் போது, அங்கு பார்வையாளராக வந்திருந்த வலையப்பட்டியை சேர்ந்த 13 வயது சிறுவன் பாஸ்கர் காலை முட்டியதில் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். அங்கு நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியை கான பலரும் வருகை தந்தனர். அப்போது மஞ்சுவிரட்டு காளை அவிழ்த்துவிடப்பட்டு அது குறிப்பிட்ட தூரத்தை கடந்து, மாட்டின் உரிமையாளர்கள் அதனை பிடிக்க முற்படும் போது காளை … Read more

டூப் இல்லாமல் மாடுபிடி வீரராக நடிக்க ஆசை! அருண் விஜய் பேச்சு!

arun vijay

நடிகர் அருண் விஜய் தன்னனுடைய படங்களில் டூப் இல்லாமல் நடித்து வருவது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான். அந்த வகையில், இவர் சமீபத்தில் நடித்திருந்த மிஷன் சாப்டர் 1 படத்தில் கூட சண்டைக்காட்சிகளில் நடித்து கைககளில் காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக தான் தற்போது அருண் விஜய் தனது கைகளுக்கு கட்டுப்போட்டு கொண்டு இருக்கிறார். இருப்பினும் தொடர்ச்சியா தனது படங்களில் பெரும்பாலான காட்சிகளை டூப் இல்லாமல் அவரே செய்து வருகிறார். இந்நிலையில், இன்று அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிகட்டுப்போட்டியை … Read more