பொங்கல் வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட்..!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

இன்று நாடு முழுவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், ‘தமிழகத்தின் எழுச்சி மிக்க கலாச்சாரத்தின் அடையாளமாக பொங்கல் திகழ்கிறது. இந்த சிறப்பு வாய்ந்த நாளன்று அனைவருக்கும் குறிப்பாக உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்துக்கள். இயற்கையுடன் நமது பிணைப்பும் நமது சமூகத்தின் சகோதரத்துவ உணர்வு இன்னும் ஆழமாக நான் பிரார்த்திக்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.