இது நடந்தால் டிக்கெட் விலை 30% குறையும் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளுக்கு மாறினால் டிக்கெட் விலை 30% குறையும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு. ரூ.2,300 கோடி மதிப்பிலான ஐந்து வழி சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பொதுப் போக்குவரத்து அமைப்பில் டீசல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மாநில போக்குவரத்து கழகங்கள், மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளுக்கு … Read more

#JustNOW: மின்சார டிராக்டர், லாரிகள் விரைவில் அறிமுகம் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

விரைவில் மின்சாரத்தில் இயங்கும் டிராக்டரை அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு. மகாராஷ்டிரம் மாநிலம் புனேவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, மின்சார ஸ்கூட்டர்கள், கார்கள், பேருந்துகள் போன்று, மின்சார டிராக்டர், லாரிகள் விரைவில் அறிமுகம் செய்யப்பட்டு, பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார். எத்தனால், மெத்தனால் போன்று, மின்சாரமும் மாற்று எரிசக்தியாக பெருமளவில் பயன்படுத்தப்படும். எரிபொருள் தேவையில் தன்னிறைவை அடைவதோடு, நாட்டில் சுற்றுசூழலுக்கு … Read more

60 கி.மீ.க்கு இடையில் உள்ள சுங்கச்சாவடிகள் மூடப்படும் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு!

60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு. தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒன்றுக்கு மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இருக்குமானால் 3 மாதத்திற்குள் அகற்றப்படும் எனவும் டெல்லி நாடாளுமன்ற மக்களவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான, எம்பியுமான தொல். திருமாவளவன் இதுதொடர்பாக கோரிக்கை வைத்த நிலையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் … Read more

#BREAKING: 8 சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற கோரிக்கை – அமைச்சர் எ.வ.வேலு..!

தமிழக பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு டெல்லியில் மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் எ.வ.வேலு பரனூர், சென்ன சமுத்திரம், வானகரம், சூரப்பட்டு, நெமிலி ஆகிய 5 சுங்கச் சாவடிகளை அகற்றுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 8 சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டும்: தமிழ்நாட்டில் 8 சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டும். … Read more

மாட்டுச் சாணம் மூலம் பெயிண்ட் தயாரிக்கும் முறை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது – மத்திய அமைச்சர்

மக்கள் மாற்று எரிபொருளைப் பயன்படுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இன்று தமிழகம் வந்த மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று, வேலூர் வாலாஜாபாத் அருகே உள்ள விசி மோட்டூரில் அமைக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பெங்களூரு … Read more

மாட்டு சாணம் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள புதிய பெயிண்ட் ! இன்று அறிமுகம் செய்து வைக்கிறார் கட்கரி

காதி கிராமத் தொழில்கள் ஆணையம் தயாரித்துள்ள புதுமையான பெயிண்ட் மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை  அமைச்சர் நிதின் கட்கரி இன்று அறிமுகப்படுத்துகிறார். சுற்றுச்சூழலுக்கு உகந்த, விஷத் தன்மையற்ற வகையில் “காதி இயற்கை வர்ணம்” என்று பெயரிடப்பட்டுள்ள  இந்த பெயிண்ட் , பூஞ்சைக்கும்,  நுண்ணுயிரிக்கும் எதிராக செயல்படும் முதல் பெயிண்ட்  ஆகும்.பசு சாணத்தை அடிப்படைப் பொருளாகக் கொண்டு மணமில்லாமல் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பெயிண்ட் குறைந்த விலையில்  இருப்பதுடன்  இந்திய தர நிர்ணய அமைப்பின் சான்றையும் பெற்றுள்ளது. காதி இயற்கை வர்ணம் 2 விதங்களில் கிடைக்கின்றன- … Read more

அடுத்த ஆண்டு விற்பனையத் தொடங்க உள்ள டெஸ்லா – மத்திய அமைச்சர் கட்கரி தகவல்

அமெரிக்காவை சேர்ந்த நிறுவனமான டெஸ்லா ,2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் விற்பனையத் தொடங்க உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்  நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு அமைச்சர்  நிதின் கட்கரி பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,ஏராளமான இந்திய நிறுவனங்களும் மின்சார வாகனங்களை தயாரித்து வருகின்றன.அவை மிகவும் மலிவாக இருக்கும் .ஆனால் தொழில்நுட்ப ரீதியாக டெஸ்லாவைப் போலவே மேம்பட்டவை.டெஸ்லா முதலில் விற்பனையுடன் நடவடிக்கைகளைத் தொடங்கும். பின்னர் கார்களுக்கான  உற்பத்தியைப் தொடங்கும்.”ஐந்து ஆண்டுகளில் … Read more

#Breaking: மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை தமிழக முதல்வர் பழனிசாமி, சென்னையில் இன்று மாலை 5 மணிக்கு சந்திக்கிறார். சென்னையில் உள்ள தனியார் விடுதியில் நெடுஞ்சாலை துறை ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் சாலை போக்குவரத்துக்கு மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்  நிதின் கட்கரி பங்கேற்கவுள்ளார். அதன்பின், மாலை 5 மணிக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை தமிழக முதல்வர் பழனிசாமி சந்திக்கவுள்ளார்.

#ஆந்திராவில் ரூ.15,592 கோடி செலவில் #16 தேசிய நெடுஞ்சாலை.!

ஆந்திராவில் மாநில பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக 1,411 கி.மீ  தொலைவில் ரூ .15,592 கோடி மதிப்புள்ள 16 தேசிய நெடுஞ்சாலை அமையவுள்ளது. இந்த திட்ட பணிகளுக்கு மத்திய நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டவுள்ளார் என மத்திய சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம்  தெரிவித்துள்ளது.

நிதின் கட்கரி விரைவில் நலம்பெற வேண்டும்.. மு.க.ஸ்டாலின் ட்விட்..!

நேற்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து, தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டேன் என தெரிவித்தார். நிதின் கட்கரிகொரோனா பாதிப்பிலிருந்து விரைவில் நலம்பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஸ்ரீபாத் நாயக், கஜேந்திர சிங், சுரேஷ் அங்காடி ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. I wish Thiru @nitin_gadkari … Read more