பிரதமர் மோடியை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்… எலான் மஸ்க்!

Elon Musk

Elon Musk: இந்தியாவில் பிரதமர் மோடியை சந்திக்க ஆவலுடன் இருப்பதாக பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் கூறியுள்ளார். இந்தியாவை மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் இடமாக மேம்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடந்த மாதம் நிறுவனங்கள் இந்தியாவில் ரூ.4,150 கோடி முதலீடு செய்தால் இறக்குமதி வரியை குறைக்கும் புதிய EV கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதாவது, இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்கு அமெரிக்காவை தளமாகக் கொண்ட … Read more

உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர் பட்டத்தை இழந்தார் எலான் மஸ்க்! முதலிடம் யாருக்கு தெரியுமா?

Bezos vs Musk: உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர் என்ற பெருமையை எலான் மஸ்க் இழந்துள்ளார். இதனையடுத்து அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர் என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளார். Bloomberg Billionaires Index-ன் குறியீட்டில் ஜெஃப் பெசோஸிடம் எலான் மஸ்க் முதல் இடத்தை இழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (திங்கள்கிழமை) டெஸ்லா பங்குகள் 7.2% அளவில் சரிந்ததையடுத்து இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதே சமயம் பெசோஸ் தனது செல்வத்தின் பெரும்பகுதியை (சுமார் 9 சதவீதம்) … Read more

‘ஆப்டிமஸ்-ஜென் 2’ ரோபோவை வெளியிட்டார் எலான் மஸ்க்!

Optimus-Gen 2

உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க், பல துறையில் தொடர்ந்து பல்வேறு புதுமைகளை படைத்து வருகிறார். அதன்படி, டெஸ்லா எலக்ட்ரிக் கார், விண்வெளி பயணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அசத்தி வரும் எலான் மஸ்க், சமீபத்தில் நியூராலிங்க் நிறுவனம் உருவாக்கிய சிப்-ஐ மனித மூளையில் பொருத்துவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில், சில மாதங்களுக்கு முன்பு டெஸ்லா நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய எலான் மஸ்க், மனித உருவ ரோபோக்களை தயாரிக்கப்போவதாக அறிவித்திருந்தார். … Read more

டெஸ்லா பங்குகள் முதன்முறையாக 10% சதவீதத்துக்கும் மேல் சரிந்தது.!

டெஸ்லா பங்குகள் ஆகஸ்ட் 2020க்கு பிறகு முதன்முறையாக தனது மிகக் குறைந்த நிலைக்கு 11.41% சரிந்தன. எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் பங்குகள் ஆகஸ்ட் 2020க்கு பிறகு முதன்முறையாக மிகக்குறைந்த நிலைக்கு சரிந்துள்ளன. நேற்று செவ்வாய்க்கிழமை டெஸ்லாவின் பங்குகள் 11.41% குறைந்து 109.10 டாலரில் முடிவடைந்தது. நவம்பர் 2021 இல் டெஸ்லா பங்குகள் அதன் அதிகபட்ச உச்ச வரம்பான 407.36 டாலரில் இருந்தது குறிப்பிடத்தக்கது, மேலும் டெஸ்லாவின் மொத்த மதிப்பும் சுமார் 345 பில்லியன் டாலர் … Read more

டெஸ்லா பங்குகள் சரிவு எதிரொலி.! உலக பணக்காரரான எலான் மஸ்க்கின் சொத்துமதிப்பு 8 லட்சம் கோடி சரிவு.!

டெஸ்லாவின் பங்குகள் சரிந்ததால் உலகின் பெரிய பணக்காரரான எலான் மஸ்க்கின் சொத்துமதிப்பில் $100 பில்லியன் இழப்பு. நவம்பர் 2020க்குப் பிறகு டெஸ்லா பங்குகள் மிகக் குறைந்த நிலைக்குச் சென்றதால், உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 2022ல் முதல்முறையாக 100 பில்லியன் டாலருக்கும்(ஏறத்தாழ 8லட்சத்து 17,000 கோடி) அதிகமாகக் குறைந்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு மஸ்க்கின் சொத்துமதிப்பு $340 பில்லியனுக்கு உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி … Read more

$4 பில்லியன் மதிப்புள்ள டெஸ்லா பங்குகளை விற்றுள்ள எலான் மஸ்க்.!

டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க், கிட்டத்தட்ட $4 பில்லியன் மதிப்புள்ள 19.5 மில்லியன் டெஸ்லா பங்குகளை விற்றுள்ளார். டெஸ்லாவின் தலைமை அதிகாரி மற்றும் ட்விட்டரின் புதிய தலைவர் எலான் மஸ்க், $3.95 பில்லியன் மதிப்புள்ள 19.5 மில்லியன் டெஸ்லாவின் பங்குகளை விற்றுள்ளார். ஏற்கனவே ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் $15.4 பில்லியன் மதிப்புள்ள அதன் பங்குகளை விற்றார், இதன் மூலம் மொத்தமாக டெஸ்லாவின் $20 பில்லியன் பங்குகளை மஸ்க் விற்றுள்ளார். ஆகஸ்ட் மாதத்தில் டெஸ்லா பங்குகளை விற்க … Read more

எலான் மஸ்கின் சட்டையில்லா புகைப்படம் இணையத்தில் வைரல்.. அதற்கு அவரே அளித்த சூப்பர் பதில் இதோ…

எலான் மஸ்கின் சட்டையில்லா புகைப்படத்தை ஒருவர் டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார். அதற்கு, எலான் மஸ்க் தனது பாணியில் கருத்து தெரிவித்துள்ளார்.     உலக பணக்காரர்களின் மிக முக்கிய இடத்தில் இருப்பவரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், தன்னுடைய தொழிலில் ஈடுபாடாய் இருப்பது போல , தன்னுடைய சமூக வலைதள பக்கத்திலும் ஈடுபாடாய் இருப்பவர். தனக்கு, தன்னை பற்றி வரும் கருத்துக்களுக்கு பெரும்பாலும் பதில் அளித்து விடுவார். அப்படி தான், ஒரு நபர் , தனது டிவிட்டர் … Read more

#Flash:ட்விட்டருடனான ஒப்பந்தம் ரத்து – எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும்,உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் முன்னிலையில் உள்ளவருமான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ட்விட்டரில் சுதந்திரமான பேச்சுக்கான இடம் சுருங்கி வருகிறது என விமர்சித்திருந்த நிலையில்,கடைசி நேரத்தில் ட்விட்டர் குழுவில் சேருவதைத் தவிர்த்து,பின்னர் அதை வாங்குவதாக அறிவித்தார்.இதற்காக, 44 பில்லியன் டாலர்களுக்கு ஏப்ரல் 25 ஆம் தேதி அன்று ஒப்பந்தம் போடப்பட்டது. இந்நிலையில்,முன்னணி சமூக ஊடக நிறுவனமான ட்விட்டர்,ஒப்பந்தத்தின் பல விதி முறைகளை மீறியதால் அதனை வாங்குவதற்கான தனது 44 … Read more

“ட்விட்டரை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இருந்து விலகல்?” – எலான் மஸ்க் விடுத்த எச்சரிக்கை!

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும்,உலக பெரும் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தலைப்புச் செய்திகளை உருவாக்கி வருகிறார்.அந்த வகையில், ட்விட்டரில் சுதந்திரமான பேச்சுக்கான இடம் சுருங்கி வருவதை விமர்சித்த எலான்,கடைசி நேரத்தில் ட்விட்டர் குழுவில் சேருவதைத் தவிர்த்து, பின்னர் அதை 44 பில்லியன் டாலர்கள்(3.36 லட்சம் கோடி) மதிப்பில் ஏப்ரல் 25 ஆம் தேதி அன்று கைப்பற்றி,அதை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.எனினும், ஒப்பந்தம் இன்னும் முடிவடையவில்லை. இந்நிலையில்,ட்விட்டரை வாங்குவதற்கான … Read more

உடனே அலுவலகத்திற்கு வரவும்;இல்லையென்றால் நிறுவனத்தை விட்டு வெளியேறுங்கள் – எலோன் மஸ்க்

டெஸ்லாவின்  தலைமை நிர்வாகி எலோன் மஸ்க் ஊழியர்களை அலுவலகத்திற்கு திரும்புங்கள்  அல்லது நிறுவனத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட இந்த மெமோ தற்பொழுது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. தொலைதூர வேலையைச் செய்ய விரும்பும் எவரும் வாரத்திற்கு குறைந்தபட்சம் (அதாவது *குறைந்தபட்சம்*) 40 மணிநேரம் அலுவலகத்தில் இருக்க வேண்டும் அல்லது டெஸ்லாவிலிருந்து வெளியேற வேண்டும். இது தொழிற்சாலை தொழிலாளர்களிடம் நாம் கேட்பதை விட குறைவு. மேலும் ,”இது சாத்தியமற்றது குறிப்பாக விதிவிலக்கான பங்களிப்பாளர்கள் … Read more