ரூ.60 கோடி நிதி போதாது, ரூ.500 கோடி ஒதுக்க வேண்டும் – மு.க ஸ்டாலின்

இன்று நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதித்த 3 பேரின் தற்போதைய நிலை என்ன? என்றும் கொரோனாவிற்கு ஒதுக்கப்பட்ட ரூ.60 கோடி நிதி போதாது, ரூ.500 கோடி ஒதுக்க வேண்டும் என பேரவையில் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அதில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் என தெரிவித்தார். ஆனால் வீடு திரும்பிய நபரை தொடர் … Read more

ரஜினி கட்சி ஆரம்பித்தால் அங்கும் செந்தில் பாலாஜி செல்வார் – அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் விமர்சனம்.!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி, அதிமுக அரசின் திட்டங்களை குறை சொல்லி பேசினார். அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், அதிமுகவில் செந்தில்பாலாஜி இருந்தபோது தன் உடலில் உயிர் இருக்கும் வரை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருப்பேன் என்று பேசி இருந்ததை சுட்டிக்காட்டினார். இதன் பின்னர் டிடிவி தினகரன் பக்கம் சென்ற செந்தில் பாலாஜி தற்போது மு க … Read more

மருந்து கண்டுபிடித்தால் சுகாதாரத் துறையை அணுகலாம் – அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை கிண்டியிலுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் உலகளவில் கொரோனா வைரஸ் பரவல் தெடர்பாக கருத்தரங்கம் நடைபெற்றது. அப்போது பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உலக முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தகைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர்கள் கையாளும் முறை என்ன என்பதை குறித்து சர்வதேச மருத்துவர்களுடன் கேட்டு தெரிந்துகொண்டதாக அமைச்சர் தெரிவித்தார்.  மேலும் தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், பள்ளி, கல்லூரிகளில் தேர்வெழுதவுள்ள மாணவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் … Read more

Breaking:”கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழக நபர் குணமடைந்தார்” -அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட் ..!

ஓமனில் இருந்து தமிழகம் வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒரு  நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்  ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் பரிசோதனை செய்த போது கொரோனா இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என  என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #Corona update: a good news for Our state, the Pt undergoing treatment at #RGGH is tested negative for Corona,this speedy … Read more

அமைச்சர் விஜயபாஸ்கரின் கோரிக்கைக்கு அவசியமில்லை! உயர்நீதிமன்றம் உத்தரவு!

2017 ஆம் ஆண்டு அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறையினரின் மறு மதிப்பீடு தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் விஜயபாஸ்கரின் கோரிக்கையை மறுத்து வருமான வரித்துறையினர் அறிக்கையை ஏற்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் வீட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது 2011 – 12 ஆண்டு முதல் 2018 – 19 ஆண்டு வரை உள்ள வருமான வரி தாக்கல் … Read more

சுகாதாரத்துறையில் பின்னோக்கி செல்லும் தமிழகம்! ஆய்வில் தகவல் !

மத்திய அரசின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்கள்பட்டியலில் தமிழகமானது பின்னோக்கி சென்று உள்ளது தெரிகிறது. கடந்த ஆண்டு சுகாதாரத்துறையில் தமிழ்நாடு இந்திய அளவில் மூன்றாம் இடத்தைப் பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு ஒன்பதாம் இடத்தைப் பெற்றுள்ளது. மாநிலத்தின் சுகாதாரம், மருத்துவ வசதிகள் அடிப்படையில் இந்தஆய்வானது  நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நடந்த ஆய்வின் முடிவில் கேரளா மாநிலம் தொடர்ந்து முதல் இடத்தையும்,  இரண்டாம் இடத்தை ஆந்திர மாநிலமும் , மகாராஷ்டிரா மாநிலம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு … Read more

அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு முடித்து வைப்பு

ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியது போல இனிமேல் நடக்காது என்று   சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்  பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.பிரமாணப் பத்திரம் தாக்கல்   செய்த நிலையில் வழக்கை முடித்து வைப்பதாக   உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

சிறப்பு பேருந்துகளில் 2 லட்சம் பேர்  பயணம் -அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கடந்த 2 நாட்களில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக 11 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  கூறுகையில்,  பொங்கலுக்கு சொந்த ஊர் செல்பவர்கள், சிரமமின்றி செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனுக்குடன் சரிசெய்யப்பட்டு வருகிறது.கடந்த 2 நாட்களில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக 11 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு , ரூ.18 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகளில் 2 லட்சம் … Read more

தேசிய மருத்துவ ஆணையம் மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்பட கூடாது !

மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் தேசிய மருத்துவ ஆணையம் செயல்பட கூடாது என  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் . மருத்துவ ஆணைய விவகாரத்தில் தமிழகத்திற்கு பாதிப்பு வராத வகையில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்படும் என மாநில சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் தேசிய மருத்துவ ஆணையம் செயல்பட கூடாது என்றார். எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழகத்தில் முதல் சித்த மருத்துவ திருநாளை தொடங்கி வைத்து பேசிய … Read more