தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 461 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 461 ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 97 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 537 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை. தமிழகம் முழுவதும்  5,339 பேர் கொரோனாவுக்கு  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் க்கு கொரோனா தொற்று உறுதி !

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது,நேற்று முதல் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு இன்று மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தைலாபுரம் தோட்ட இல்லத்தில் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். கொரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் அனைவரும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்துகொள்ள வேண்டும். தவணை தவறாமல் கொரோனா … Read more

மக்களே உஷார் ! தமிழகத்தில் இன்று 2654 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று கொரோனாவால் புதிதாக 2,654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் கொரோனாவின் பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது.இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. நேற்று 2,533 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 2,654 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,066 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்.இதனால் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை … Read more

தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியது.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,384 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இதுவரை நோத்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,55,449 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 6,384 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 2,96,171 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மேலும் 116 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,123 ஆக உயர்ந்துள்ளது.

நாளை முதல் காவல்துறையினர் வீடுகளுக்கு பால் விநியோகம் கிடையாது.!

நாளை முதல் காவல்துறையினர் வீடுகளுக்கு பால் வினியோகம் செய்யப்போவதில்லை என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பால் வினியோகம் தொழிலாளர் நலச்சங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன்படி நாளை முதல் காவல்துறையினர் வீடுகளுக்கு பால் வினியோகம் செய்ய போவதில்லை என தமிழ்நாடு பால் முகவர் சங்கம் தொழிலாளர் நல சங்கம் சார்பில் அவசர முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். இதுபற்றி தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி … Read more

பூச்சாண்டி வித்தைகளை மு.க.ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும் -அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

மக்கள் பணியாளர்களுக்கு எதிராக  சதித்திட்டம் தீட்டி அவதூறு பரப்பும் பூச்சாண்டி வித்தைகளை மு.க.ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது  கொரோனா எனும் கொடிய நோயிலிருந்து தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற ஓய்வறியாது உழைத்து கொண்டிருக்கிறார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.நோய் தடுப்பு நடவடிக்கைகளையும், பொருளாதார மீட்பு முயற்சிகளையும், சிறந்த நிர்வாக நேர்த்தியால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின்  அரசியல் செல்வாக்கு நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் உயர்ந்து வருவதைக் … Read more

பாடத்திட்டங்களை குறைக்க ஒரு சிறப்புக் குழு – அமைச்சர் செங்கோட்டையன்

10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று ஈரோடு மாவட்டம்  கோபியில் செய்தியாளர்களிடம்  தெரிவித்தார். தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் . 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வரும் ஜூலை மாதம் முடிவுகள் வெளியாகும் என தெரிவித்தார். கொரோனா … Read more

வீடு தேடிவருகிறது 100 நாள் வேலைத்திட்டத்தின் ஊதியம்

100 வேலைத்திட்டத்தில் பணியாற்றுபவர்களின் ஊதியத்தை அவரவர் வீடுகளுக்கே சென்று அளிக்க முதலமைச்சர் உத்தரவு .இதுவரை பணியாட்களின் ஊதியம் வங்கிகணக்கில் செலுத்தப்பட்டு வந்த நிலையில் 3 மாதத்திற்கு நேரடியாக பணியாட்களின்  வீடுகளுக்கு சென்று அளிக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார் .

திருவள்ளூரில் மேலும் 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் !

திருவள்ளூரில் கொரோனா பாதிக்கப்பட்ட 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இந்தியாவில் 28 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில்  கொரோனா பாதிப்பால் 1937 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 1101 பேர் கொரானாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று(ஏப் 27) மட்டும் புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 81 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவால் 53 பேர் … Read more

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் தீவிர ஆலோசனை!

உலகம் முழுக்க கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தாக்கம் அதிகமாவதை கட்டுப்படுத்த பிரதமர் மோடி, இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.  தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மற்றும் ஒவ்வோர் மாவட்டத்திலும் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் தீவிர ஆலோசனையினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி … Read more