Breaking:”கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழக நபர் குணமடைந்தார்” -அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட் ..!

ஓமனில் இருந்து தமிழகம் வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒரு  நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்  ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அவருக்கு மீண்டும் பரிசோதனை செய்த போது கொரோனா இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என  என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அரசு சார்பில் சிறந்த முறையில் சிகிச்சை தரப்பட்டதால் பாதித்தவர் குணம் அடைந்தார் என விஜயபஸ்கர் கூறியுள்ளார்.மேலும் தமிழகத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

author avatar
murugan