தேசிய மருத்துவ ஆணையம் மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்பட கூடாது !

மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் தேசிய மருத்துவ ஆணையம் செயல்பட கூடாது என  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் .

மருத்துவ ஆணைய விவகாரத்தில் தமிழகத்திற்கு பாதிப்பு வராத வகையில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்படும் என மாநில சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் தேசிய மருத்துவ ஆணையம் செயல்பட கூடாது என்றார். எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழகத்தில் முதல் சித்த மருத்துவ திருநாளை தொடங்கி வைத்து பேசிய அவர், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வருவது பற்றி மத்திய அரசு முடிவு செய்யும் என்றார்.
source: dinasuvadu.com

Leave a Comment