ஜார்கண்ட் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் மூவர் பலி – நால்வர் படுகாயம்!

ஜார்கண்ட் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் மூவர் பலியாகியுள்ளனர், நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பலமு என்னும் மாவட்டத்தில் நேற்று மின்னல் தாக்கியதால் 3 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து கூறிய அதிகாரிகள், 37 வயதுடைய ராம்துனி மேத்தா அவரது பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் கொல்லப்பட்டுள்ளார். அதுபோல சத்தர்பூர் தொகுதியிலுள்ள பிகி எனும் கிராமத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த மைதானத்தில் பலத்த … Read more

ஒடிசாவில் கனமழை : கடந்த 3 நாட்களில் 7 பேர் உயிரிழப்பு, 3 பேர் மாயம்!

ஒடிசாவில் கனமழை பெய்து வருவதால், கடந்த 3 நாட்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில மாதங்களாகவே இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஒடிசாவின் சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 3 நாட்களில் மட்டும் ஒடிசாவில் பெய்த கன மழையால் 7 பேர் உயிரிழந்துள்ளனர்,2 பேர் காணாமல் போயுள்ளனர். பல மாவட்டங்களில் இந்த கனமழை வெள்ள அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அங்கு தீயணைப்பு … Read more

புல்வமாவில் பயங்கரவாதிகள் தாக்குதல்.. ராணுவ வீரர் காயம்.!

ஜம்மு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் உள்ள கம்ரசிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தகவல் கிடைத்த இடத்திற்கு பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து திவீர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை மீது துப்பாக்கியால் சுட்டனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே  துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த மோதலில் ராணுவ வீரர் காயம் அடைந்தார், பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் … Read more

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை, தீவிரவாதிகளிடையே துப்பாக்கிச்சூடு.! பாதுகாப்பு படை வீரர் காயம்.!

இன்று ஜம்மு-காஷ்மீரில் ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள ரன்பீர்கர் பகுதியில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. ரன்பீர்கரில் நடந்து வரும் நடவடிக்கையில் ஒரு பாதுகாப்பு படை வீரர் காயமடைந்துள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். காயமடைந்த பாதுகாப்பு படை வீரரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக அதிகாரி  தெரிவித்தார். காவல்துறை  மற்றும் இந்திய ராணுவ வீரர் கூட்டுக் குழுவாக சேர்ந்து தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவல்களின் பேரில் ரன்பீர்கரில் சுற்றி வளைத்து … Read more

யம்மாடி.. இதுக்கு போலீஸ் அடி எவ்ளோவோ பரவாயில்லை… கதறிய திருடன்..!

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகாவில் உள்ள வெள்ளப்பள்ளம் கிராமம், கவுண்டர் தெருவில் வசித்து வருபவர், நாகராஜன். இவர் தனது வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றார். அப்பொழுது, மீனவர் காலனி வடக்குத் தெருவைச் சேர்ந்த லிங்கம் என்பவர் நாகராஜன் வீட்டின் பூட்டை இரும்பு கம்பியால் உடைத்து திருட முயற்சித்தார். அந்த காட்சிகள், அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பூட்டை உடைப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள், அவரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். அதில் அவரின் தலை, முதுகு, … Read more

காஞ்சிபுரத்தில் வேன் மீது லாரி மோதிய விபத்தில் 10 பெண்கள் படுகாயம் …

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சென்னை, பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் 10 பெண்கள் படுகாயம் அடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரின் அருகே உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் இருந்து வேலை முடிந்து பெண்கள் ஒரு வேனில் காஞ்சிபுரம் நோக்கி வந்துள்ளனர். அப்போது, பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் லாரி சாலையை கடக்க முயன்ற வேன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில், வேன் தலைகீழாக கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது. … Read more

அதிமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு : ஒருவர் உயிரிழப்பு ; 2 பேர் படுகாயம்

திருநெல்வேலியில் கொடியன்குளம் குமார் என்ற அதிமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசி, கத்தியால் சரமாரியாக தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் கொடியன்குளம் குமார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் உறவினர் செந்தில்குமார் ஆகியோர் ஒன்றாக பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது இருசக்கர மோட்டார் வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் குமாரின் அலுவலகத்தின் மீது திடீரென நாட்டு வெடிகுண்டை … Read more

டெல்லியில் சாகச பயிற்சியின்போது ஹெலிகாப்டரிலிருந்து விழுந்த வீரர்கள் காயம்!

ஆண்டுதோறும் ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் ராணுவ தின விழாவின்போது, வீரர்கள் பல்வேறு சாகசங்களை நிகழ்த்துவது வழக்கம். இந்த ஆண்டு ராணுவ தினத்துக்காக டெல்லியில் உள்ள கன்டோன்மென்ட் மைதானத்தில், நேற்று வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டிருந்திருந்தனர். ஹெலிகாப்டரில் கயிற்றில் தொங்கியவாறே சாகசம் செய்ய 3 வீரர்கள் பயிற்சி எடுத்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக கயிறு அறுந்து விழுந்ததால், அவர்கள் மூவரும் அடுத்தடுத்து கீழே விழுந்தனர். இதில் காயமுற்ற 3 பேரும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் … Read more