காஞ்சிபுரத்தில் வேன் மீது லாரி மோதிய விபத்தில் 10 பெண்கள் படுகாயம் …

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சென்னை, பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் 10 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரின் அருகே உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் இருந்து வேலை முடிந்து பெண்கள் ஒரு வேனில் காஞ்சிபுரம் நோக்கி வந்துள்ளனர். அப்போது, பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் லாரி சாலையை கடக்க முயன்ற வேன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில், வேன் தலைகீழாக கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது. இதனால், வேனில் இருந்த 10 பெண்கள் உட்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பெண்கள் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதில், ஜெய பிரியா என்ற ஒரு பெண் மட்டும் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தாலுக்கா போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment