மாஸ்கோ பயங்கரவாத தாக்குதல்: 11 பேர் கைது…பலி எண்ணிக்கை 115 ஆக உயர்வு!

moscow attack

Moscow Attack: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக 11 பேரை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். ரஷ்யா நாட்டின் தலைநகரமான மாஸ்கோவில் மேற்கு பகுதியில் அமைந்துள்ள இசை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கமான குரோகஸ் அரங்கத்திற்குள், திடீரென நுழைந்த ராணுவ உடை அணிந்திருந்த பயங்கரவாதிகள், துப்பாக்கியாலும், வெடி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிது. இதனால், தாக்குதல் நடத்தப்பட்ட முழு அரங்கமும் தீப்பற்றி எரிந்து நாசமடைந்துள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 115 ஆக … Read more

மாஸ்கோவில் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமான தாக்குதல் – 60 பேர் உயிரிழப்பு!

attack near Moscow

Moscow Terror Attack: ரஷ்யாவில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது. ரஷ்யா நாட்டின் தலைநகரமான மாஸ்கோவில் மேற்கு விளிம்பில் அமைந்துள்ள இசை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கமான குரோகஸ் சிட்டி ஹாலில் திடீரென புகுந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 60 பேர் உயிரிழந்த நிலையில், 150க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது, இந்த கொடூர தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. ராணுவ உடை அணிந்து வந்த பயங்கரவாதிகள் உடலில் … Read more

தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதல் – ஓபிஎஸ் கடும் கண்டனம்!

ஒற்றுமையை குலைக்கும் வகையில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலுக்கு எனது கடும் கண்டனம் தெரிவிப்பதாக ஓபிஎஸ் அறிக்கை. ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள ஜெவானில் உள்ள பந்தா சவுக்கில் நேற்று மாலை 6 மணியளவில் ஒரு போலீஸ் பேருந்து மீது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 14 போலீசார் படுகாயமடைந்தனர். காயமடைந்த போலீசாரின் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பயங்கரவாதிகள் தாக்குதல் குறித்து அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கண்டங்களை தெரிவித்து … Read more

#BREAKING: பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு – 14 போலீசார் படுகாயம்!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 போலீசார் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல். ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 போலீசார் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. ஸ்ரீநகரின் பாந்தாசாவு பகுதியில் போலீஸ் ரோந்து வாகனம் மீது மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதலில் காயமடைந்த போலீசாரில் 5 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த தகவலறிந்த பாதுகாப்புப் படையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று … Read more

“குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்” – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!

அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவினரைத் தாக்கியவர்கள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூரில் ராணுவ அதிகாரி தனது குடும்பத்தினருடன் சென்று கொண்டிருந்தபோது கண்ணிவெடி மூலம் வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அதிகாரி உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவு அதிகாரி, மனைவி, மகன், ட்ரைவர் மற்றும் மூன்று துணை ராணுவப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். கர்னல் … Read more

மணிப்பூரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு!

மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூரில் ராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு. மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூரில் ராணுவ அதிகாரி தனது குடும்பத்தினருடன் சென்று கொண்டிருந்தபோது கண்ணிவெடி மூலம் வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அதிகாரி உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவு அதிகாரி, மனைவி, மகன், ட்ரைவர் மற்றும் மூன்று துணை ராணுவப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். கர்னல் விப்லவ் திரிபாதியின் மனைவியும் மகனும் கான்வாய் … Read more

புல்வாமாவில் பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட சிறப்பு காவல்துறை அதிகாரி மற்றும் அவரது மனைவி…!

ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் சிறப்பு காவல் துறை அதிகாரி ஃபயாஸ் அஹமது மற்றும் அவரது மனைவி உயிரிழப்பு. ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில், அவந்திபோரா பகுதியில் உள்ள ஹரிபரிகாமில் உள்ள சிறப்பு காவல் துறை அதிகாரி ஃபயாஸ் அஹமதின் வீட்டிற்குள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணியளவில் பயங்கரவாதிகள் நுழைந்து, துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ஃபயாஸ் அஹமது, அவரது மனைவி ராஜ பேகம் மற்றும் அவரது மகள் … Read more

#BREAKING: காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 பேர் உயிரிழப்பு..!

காஷ்மீரின் சோப்பூரில் லஷ்கர் இ-தொய்பா பயங்கரவாதிகள்  நடத்திய தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். இன்று வடக்கு காஷ்மீரின் சோப்பூரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது லஷ்கர் இ-தொய்பா பயங்கரவாதிகள்  போலீசார் மீது தாக்குதல் நடத்தினார்கள் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு பாதுகாப்புப் படையினரும், இரண்டு பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் மேலும் 3 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளை அந்தப் பகுதி முழுவதையும் சுற்றி வளைத்து ராணுவம், போலீசார், சிஆர்பிஎஃப் வீரர்கள் தேடுதல் வேட்டையில் … Read more

பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் – 2 சிஆர்பிஎப், ஒரு சிறப்பு போலீஸ் படை அதிகாரி வீரமரணம்.!

ஜம்மு காஷ்மீரில் திடீரென பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிசூடு நடத்தியதில் 3 பேர் வீரமரணம். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டம் க்ரீரி பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் சிறப்பு போலீஸ் படை அடங்கிய கூட்டு பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, திடீரென அங்கு வந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிவிட்டனர். இந்த சம்பவத்தில் 2 சிஆர்பிஎப் வீரர்கள், உள்ளிட்ட 3 பேரும் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு … Read more

புல்வமாவில் பயங்கரவாதிகள் தாக்குதல்.. ராணுவ வீரர் காயம்.!

ஜம்மு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் உள்ள கம்ரசிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தகவல் கிடைத்த இடத்திற்கு பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து திவீர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை மீது துப்பாக்கியால் சுட்டனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே  துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த மோதலில் ராணுவ வீரர் காயம் அடைந்தார், பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் … Read more