கேரளாவிலுள்ள கோழி தீவன ஆலையில் தீ விபத்து – 20 பேர் காயம்!

கேரளாவிலுள்ள கோழி தீவன ஆலை எண்ணெய் தொட்டியில் ஏற்பட்ட வெடிவிபத்து காரணமாக, தீயணைப்பு வீரர்கள் உட்பட 20 பேர் காயமடைந்துள்ளனர். கேரளாவில் உள்ள பாலக்காடு மாவட்டத்தின் திருவிழாம்குன்னு பகுதியில் கோழி தீவன ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் உள்ள எண்ணெய் தொட்டியில் நேற்று எண்ணெய் கசிவு ஏற்பட்டு, தீ பிடித்து பரவ தொடங்கியுள்ளது. எனவே இந்த எண்ணெய் கசிவுகள் தொடர்பாக தீயணைப்புத் துறை ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் வந்துள்ளனர். … Read more

வங்கதேசத்தில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து – 52 பேர் உயிரிழப்பு!

வங்க தேசத்தில் உள்ள ஜூஸ் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் 52 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50 பேர் காயமடைந்து உள்ளனர். வங்கதேசத்தின் தலைநகராகிய டாக்காவில் உள்ள 6 மாடி கட்டிடம் கொண்ட ஜூஸ் தொழிற்சாலை ஓன்றில் நேற்று மாலை 5 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தில் அதிகளவிலான இரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் வைக்கப்பட்டிருந்ததால் அந்த தீ வேகமாக அருகிலிருந்த கட்டிடங்களுக்கு பரவியுள்ளது. உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 18 வாகனங்களில் தீயணைப்பு … Read more

டெல்லியில் லிப்ட் விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

டெல்லியில் கட்டுமான பனியின் போது திறந்த நிலையில் இருந்த லிப்ட் விழுந்ததில் 3 பேர் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.  டெல்லியிலுள்ள டி.டி.ஏ கட்டுமான இடத்தில் எதிர்பாராத விதமாக திறந்த நிலையில்  இருந்த லிப்ட் விழுந்து ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்து துவாரகா மோரில் உள்ள தாரக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். பன்னா லால் யாதவ், பசந்த், மங்கல் பிரசாத் சிங் ஆகியோர் தான் உயிரிழந்த மூவர் … Read more

கனமழையால் இடிந்து விழுந்த வீட்டு சுவர் – ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்!

மகாராஷ்டிராவில் கனமழை காரணமாக வீட்டு சுவர் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 5 பேர் காயமடைந்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மும்பை கிழக்கு பாண்ரா பகுதியில் நேற்று இரவு கன மழை கொட்டித் தீர்த்தது. அப்பொழுது அந்த பகுதியில் உள்ள ஹார்வாடி சாலை பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் ஒரு வீட்டின் சுவர் கனமழை காரணமாக இடிந்து விழுந்து மற்றொரு வீட்டின் மீது விழுந்துள்ளது. இந்த விபத்தில் இடிந்து விழுந்த வீட்டில் இருந்தவர்கள் … Read more

நியூசிலாந்து சூப்பர் மார்க்கெட் ஊழியர்களுக்கு கத்தி குத்து – 5 பேர் படுகாயம்!

நியூசிலாந்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த ஊழியர்களை கத்தியால் குத்தியதில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். நியூசிலாந்து நாட்டில் உள்ள தெற்கு தீவின் தென்கிழக்குக் கடலோரப் பகுதியில் உள்ள டுனேடின் நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் கத்திக்குத்துச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. சூப்பர் மார்க்கெட்டுக்குள் திடீரென புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்களை திடீரென கத்தியால் குத்த தொடங்கியுள்ளார். இதில் 4 ஊழியர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில், … Read more

எகிப்தில் தடம்புரண்ட ரயில் – கிட்டத்தட்ட 100 பேர் காயம்!

நேற்று எகிப்தில் ரயில் ஒன்று தடம் புரண்டதில் கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்துள்ளதாக எகிப்து சுகாதார அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எகிப்து தலை நகருக்கு வெளியே 25 மைல் தொலைவில் உள்ள ரயில் தண்டவாளத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டு உள்ளது. இந்த விபத்தில் 97 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

5.6 ரிக்டர் அளவில் ஈரானில் பயங்கர நிலநடுக்கம் – 40 பேர் காயம்!

ஈரானில் இன்று 5.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கியதால் 40 பேர் காயம் அடைந்துள்ளனர். மக்கள் தொகை பெருக்கம் அதிகம் உள்ள இந்த காலகட்டத்தில் இயற்கை சீற்றங்களும் அதிக அளவில் அவ்வப்போது ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. சுனாமி சூறாவளி காற்று போன்ற மற்ற இயற்கை சீற்றங்களை விட நிலநடுக்கம் பல்வேறு இடங்களிலும் தொடர்ச்சியாக ஏற்படும் கொண்டே இருக்கிறது. இன்று ஈரானில் காலை 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஈரானின் மேற்கு கோகிலுயே வா பாயெரஹ்மத் … Read more

ராஜஸ்தானில் இரு கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் மூவர் உயிரிழப்பு; 14 பேர் படுகாயம்!

ராஜஸ்தானில் உள்ள கங்காநகர் மாவட்டத்தில் இரு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளதுடன், 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கங்காநகர் எனும் மாவட்டத்தில் அனுப்கர் – சூரத்கர் எனும் நெடுஞ்சாலையில் இரு கார்கள் வேகமாக ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஒரு காரில் இருந்த குழந்தை உட்பட மூன்று பேர் சம்பவ இடத்தியலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், காரில் பயணம் செய்த 14 பேர் பலத்த … Read more

திருமண ஊர்வலத்தில் வெடித்த பட்டாசு – 5 குழந்தைகள் படுகாயம்!

திருமண ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததால், அங்கு நின்றுகொண்டிருந்த 5 சிறுவர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.  உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள முசாபர்நகரில் நேற்றிரவு திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது. அப்பொழுது நடைபெற்ற ஊர்வலத்தின் போது பட்டாசுகள் வெடித்துள்ளனர். அப்பொழுது அருகில் நின்றுகொண்டிருந்த சிறுவர்கள் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த சிறுவர்கள் சவான், உம்மது, ரிஹான், அங்கித் மற்றும் அமீர் என அடையாளம் காணப்பட்டு தற்பொழுது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு … Read more

மும்பை மாலில் ஏற்பட்ட பெரும் தீ..3500 பேர் வெளியேற்றம்..! 2 தீயணைப்பு வீரர்கள் காயம்..!

மும்பை நாக்பாடாவில் உள்ள சிட்டி சென்டர் மாலில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதனால்,  சுமார் 3,500 பேர் தங்கள் பாதுகாப்புக்காக வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், இந்த தீ விபத்தில் இரண்டு தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் ஜே.ஜே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த தீ அணைப்பு பணியில் 24 தீயணைப்பு இயந்திரங்கள், 250 தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்த முயற்சி சேர்த்தனர்.