யாராக இருந்தாலும் 14 நாட்கள் தனிமை – கோவை ஆட்சியர் அறிவிப்பு.!

பிற மாவட்டங்களில் இருந்து கோவை வந்தால் யாராக இருந்தாலும், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இதனால் பாதிப்பு தினந்தோறும் அதிகரித்து வண்ணம் உள்ளது. அதும் நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2323 ஆக உள்ளது. குறிப்பாக நேற்று சென்னையில் மட்டும் 132 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், … Read more

நாம் பேசுவதாலும், வணக்கம் சொல்வதாலும் கொரோனா பரவாது.! மாவட்ட ஆட்சியர் கருத்து.!

அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆரோக்கிய மையம், சுகாதாரத்துறை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (விளைக்கிழமை) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆரோக்கிய மையம், சுகாதாரத்துறை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (விளைக்கிழமை) நடைபெற்றது. இந்த நீள்கழச்சியில் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெயகாந்தன், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக நிறுவுனர், ஆசிரியர், மாணவர்கள் என விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பின்னர் பேசிய … Read more

17 பேரை கொன்ற மீதமுள்ள சுற்றுச்சுவர் இன்று இடிக்கப்படும் – மாவட்ட ஆட்சியர்..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் ஆதிதிராவிட காலனியில் சுப்பிரமணியம் என்பவர் வீட்டை சுற்றி  இருந்த 20 அடி உயரமுள்ள சுற்றுச்சுவர் நேற்று அதிகாலை 3 மணி அளவில் இடிந்து அருகில் இருந்த நான்கு வீடுகளில் விழுந்து உள்ளது. கனமழை பெய்து கொண்டு இருந்ததால் அருகில் இருந்தவர்களுக்கு எந்தவித சத்தமும் கேட்கவில்லை. இதை தொடர்ந்து அக்கபக்கத்தினருக்கு காலை 5 மணி அளவில் தான் விபத்து நடந்தது தெரியவர பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் … Read more

தனது மகளை அரசுப் பள்ளியில் சேர்த்த கலெக்டர்..! குவியும் பாராட்டுகள் ..!

தற்போது உள்ள பெற்றோர்கள் அனைவரும் தனது குழந்தைகளை ஒரு சிறந்த தனியார் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும். அதற்காக எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்ற எண்ணம் தற்போது உள்ள பெற்றோர்கள் மனதில் பதிந்துள்ளது. தங்களது குழந்தைகள் தனியார் பள்ளியில் படித்தால்தான் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணம் பெற்றோர்கள் மனதில் இருப்பதால் தான் தனியார் பள்ளிகள் அதிகமாக இயங்கி வருகிறது. இந்நிலையில்  சத்தீஸ்கரில் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்ட ஆட்சியர் தனது மகளை அரசுப் பள்ளியில் … Read more

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் உடை அணிந்து லஞ்சம் வாங்குவது போல நூதன போராட்டம் செய்த வக்கீல் !

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைப் பெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமையில் பொது மக்களிடம் மனுக்களை பெற்றார். இக்கூட்டத்திற்கு தூத்துக்குடி ஜெயராஜ் ரோடு டூவிபுரம் 7-வது தெருவை சார்ந்த வக்கீல்  தொண்டன் சுப்பிரமணி வந்து உள்ளார்.இந்த கூட்டத்திற்கு போலீசார் உடையில் வந்தார். அப்போது தனது கார் டிரைவரை மறித்து லஞ்சம் வாங்குவது போல நூதன முறையில் போராட்டம் செய்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தொண்டன் … Read more

அங்கன்வாடி பள்ளியில் பயிலும் மாவட்ட ஆட்சியரின் மகள்

நெல்லை மாவட்ட ஆட்சியர் தனது பெண் குழந்தையை அங்கன்வாடி பள்ளியில் சேர்த்திருப்பது, அரசு அலுவலர்களுக்கும், பொதுமக்களுக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது. நெல்லை மாவட்டத்தின் முதல் பெண் மாவட்ட ஆட்சியராக ஷில்பா பிரபாகர் சதீஸ் கடந்த ஆண்டு பொறுப்பேற்றார். இவர், பாளையங்கோட்டையில் உள்ள அரசு குழந்தைகள் நல மையத்தில், தனது இரண்டரை வயது மகளான கீதாஞ்சலியை சேர்த்துள்ளார். பொதுவாக வசதி படைத்தவர்கள், அரசு அதிகாரிகள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வைத்து வரும் சூழ்நிலையில், மாவட்ட ஆட்சியரின் குழந்தை … Read more

VHP அமைப்பின் ரத யாத்திரை வருவதை முன்னிட்டு செங்கோட்டை, தென்காசிக்கு 144 தடை உத்தரவு பிறப்பிப்பு – நெல்லை மாவட்ட ஆட்சியர்

விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் ரத யாத்திரை வருவதை முன்னிட்டு செங்கோட்டை, தென்காசிக்கு 144 தடை உத்தரவு பிறப்பிப்பு – நெல்லை மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு என்றால் கூட்டமாக திரள கூடாது. ஊர்வலங்கள் போராட்டங்கள் நடத்த கூடாது எனவே ரதயாத்திரையும் வர முடியாது வர கூடாது. ரதயாத்திரை மீறி வந்தால் ஜனநாயக முறையில் அனுமதி பெற்று போராடிய மாஞ்சோலை தொழிலாளர்களை அடித்து கொன்ற காவல்துறையின் லத்தியும் துப்பாக்கியும் நாட்டின் பல கலவரங்களை நிகழத்திய விஷ்வ … Read more

சந்தையூர் பொதுமக்களின் மனித உரிமை போராட்டம்…!!

சமாதான முயற்சி என்பதை கடந்து இதுநாள் வரை ஒரு வரி கூட நாம் பதிவிட வில்லை.தேவை கருதி முதல் முறையாக பதிவிடுகிறோம். ஒடுக்கப்பட்ட மக்களின் ஒற்றுமைக்கு பெரும் சவாலாக முன்னிறுத்தப்பட்டுள்ள சந்தையூர் பிரச்சினையில் சுமூக தீர்வுக்கு எடுத்துக்கொண்ட உளப்பூர்வமான முயற்சிகள் இன்னமும் தொடர்கிறது. எத்தனை நாட்கள் எத்தனை மணி நேரம் நேரடியாக, தொலைபேசி வழியாக செலவு செய்தது எல்லாம் விரயமாகிவிடாது. உண்மை அறியும் குழுக்கள் நிறையவே வந்து கொண்டிக்கிறது.அவரவர் அறிந்த உண்மைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.மாநில எல்லையும் கடந்து … Read more

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மார்ச் 12ம் தேதி உள்ளூர் விடுமுறை…!!

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மார்ச் 12ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் கணேஷ் அறிவிப்பு செய்துள்ளார். திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதனை முன்னிட்டு வரும் மார்ச் 12ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி,கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளின் மாநாடு…!!

4 ஆண்டுகளுக்கு பிறகு மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளின் மாநாடு சென்னையில் இன்று தொடங்கியது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 3 நாள் நடைபெறும் இம்மாநாட்டில் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள், காவல் அதிகாரிகள் உள்ளிட்ட ஆட்சி பணியில் உள்ள அதிகாரிகள் அனைவரும் பங்கேற்று உள்ளனர். இன்று ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளின் ஒருங்கிணைந்த கூட்டம் நடைபெறுகிறது