திருமண நிகழ்ச்சியை கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியாக மாற்றி நடைபெற்ற திருமணம்.! மொய்கவரில் கபசுர குடிநீரும், மாஸ்கும்.!

தூத்துக்குடியில் அரசு விதிமுறைகளை பின்பற்றி நடந்த திருமண நிகழ்ச்சியில் சமூக இடைவெளி மற்றும் மாஸ்க்கின் அவசியம் குறித்து வலியுறுத்தி பேனர்கள் வைத்ததோடு மொய்கவரில் கபசுர குடிநீர் மற்றும் மாஸ்க் வழங்கி அசத்தியுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக பல கட்டுபாட்டுகளுடன் திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல சுப நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் நடந்த பொறியாளர்களான கௌதம் குமார் மற்றும் மனோகிரியின் திருமணம் பெரும் அரசு விதிமுறைகளை சரியாக பின்பற்றி வரவேற்பைப் பெற்றுள்ளது. … Read more

முககவசம் அணியாமல் வெளியே செல்பவர்களுக்கு ரூ. 500 அபராதம் – குஜராத் முதல்வர்.!

குஜராத்தில் ஆகஸ்ட் 1 முதல் முககவசம் அணியாமல் வெளியே செல்பவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்று குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா வைரஸ்க்கான தடுப்பு மருந்துகள் பரிசோதனை நிலையில் உள்ளதை அடுத்து, தற்போது கொரோனாவிலிருந்து … Read more

கொரோனாவிலிருந்து பாதுகாக்க இந்த விதிமுறைகளை கடைப்பிடித்தாலே போதுமானது.! ஹரிஷ் கல்யாண் நடித்து வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ.!

கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள பிரபல நடிகரான ஹரிஷ் கல்யாண் சில விதிமுறைகளை பின்பற்றுமாறு கூறியுள்ளார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு வகையில் மக்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். தற்போது சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் பலர் வேலைக்கு செல்ல துவங்கி விட்டனர். அந்த வகையில் பிரபலங்களில் பலர் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பிரபல நடிகரான ஹரிஷ் கல்யாண் அவர்கள் … Read more

இளைஞர்களை கதறவிட்ட வைரல் வீடியோ ! #Comeback கொடுத்த திருப்பூர் போலீஸ் !

ஊரடங்கில் சுற்றிக்கொண்டு இருந்த இளைஞர்கள மீண்டும் கதறவிட்ட திருப்பூர் போலீஸ். கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் சமூக தொற்றாக மாறாமல் தடுக்க மே 3 வரை ஊரடங்கு உத்தரவு விதித்ததுள்ளனர். அதுமட்டுமின்றி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இந்தியா எடுத்து வருகிறது. கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் துப்புரவுபணியாளர்கள் என அனைவரும் தங்களது குடும்பத்தை பிரிந்து அயராத பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இளைஞர்கள் ஊரடங்கை மீறி கேரம் … Read more

25 நிமிடங்கள் வரிசையில் காத்திருந்த மாணவர்கள்- உள்ளே அனுமதிக்காத கடை ஊழியர்கள் !

நாகாலாந்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பொருள் வாங்குவதற்காக 25நிமிடங்கள் வரிசையில் காத்திருந்தனர். ஆனால் கடை ஊழியர்கள் இரண்டு மாணவர்களையும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்று கூறி  கடைக்குள் அனுமதிக்கவில்லை. இணையத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நாங்களும் உங்களை போன்ற மனிதர்கள் தான் எங்களுக்கும் அத்தியவசிய பொருட்கள் தேவை என்று மாணவர் ஒருவர் கூறுவதை கேக்கலாம் 

இன்று பிரகாஷ் ராஜின் 56 வது பிறந்தநாள் – எப்படி கொண்டாடியுள்ளார் தெரியுமா?

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி திரை உலகில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் தான் நடிகர் பிரகாஷ் ராஜ். இவருக்கு இன்றோடு 56 வயது ஆகிறது. இந்நிலையில் வைரஸ் காரணமாக பல கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து தனது பிறந்த நாளான இன்று 11 பேருக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் உதவி செய்து தனது பிறந்தநாளை இவர் கொண்டாடியுள்ளார். இதற்கு பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்த பதிவை தனது … Read more

அமெரிக்கர்கள் உதவி செய்வதாக கூறிவிட்டு நிரந்தரமான கொரோனாவை கொடுத்துவிடுவார்கள்- ஈரான் மன்னர் அயதுல்லா அலி கமேனி!

உலகெங்கும் கொரோனா வைரஸ் மக்களை அச்சப்படுத்தி வருவதோடு மட்டுமல்லாமல், பல ஆயிரக்கணக்காக உயிர்களையும் வாங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தற்போது ஈரானிலும் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  இது குறித்து பேசிய ஈரானின் உச்ச மன்னன் அயதுல்லா அலி கமேனி, அமெரிக்காவுடனாகிய கசப்புகளை கூட மறந்துவிட்டோம் என்றாலும், அவர்கள் எங்களுக்கு உதவி செய்கிறோம் என கூறுவது விந்தையாக இருக்கிறது.  ஏனென்றால், அவர்கள் கொரோனாவை குணப்படுத்த மருந்து தருவதாக கூறிவிட்டு நிரந்தரமாக கொரோனா எங்களிடம் இருப்பதற்கான மருந்துகளை … Read more

அரசுக்கு கட்டுப்பட்டு அவசர தேவைகளுக்கு மட்டுமே எங்கள் சேவை தொடரும்! ஓலோ கார் டாக்சி நிறுவனம்!

உலகளவில் பல்லாயிரக்கணக்கானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இந்த கொரோனா வைரசுக்கு 7 பேர் இதுவரையில் பலியாகியுள்ளதாகவும், 460 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.  இந்நிலையில், அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு கார் சர்விஸ் நிறுவனமாகிய ஓலா நிறுவனம் குறைந்த வாகனங்களுடன், அவசர தேவைக்கு மட்டுமே வரும் என ஓலா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சக பயணிக்கு கொரோனா – அச்சத்தில் விமானத்திலிருந்து குதித்த விமானி!

உலகம் முழுவதையுமே இந்த கொரோனா வைரஸ் பீதியில் ஆழ்த்தி வைத்துள்ளது. இதனால் எங்கு சென்றாலும் கொரோனா, கொரோனா என்ற பேச்சுதான் அதிக அளவில் பேசப்படுகிறது. மக்கள் தெருவில் நடக்கையில் கூட, எதிரில் செல்பவர்களுக்கு கொரோனா இருக்குமோ என்ற சந்தேகத்திலேயே பலர் மற்றவர்களிடம் பேசுவதை தற்போது தவிர்த்து விட்டனர். இந்நிலையில், புனேவில் இருந்து டெல்லி சென்ற ஏர் ஏசியா விமானத்தில் கொரோனா பாதிப்பு கொண்ட ஒரு வெளிநாட்டு பயணி பயணம் செய்வதாக விமானிக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே அந்த விமானத்தில் … Read more

தமிழர் வாழ் யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கு கொரோனா.?

கொரோனா வைரஸ் மக்களை மிகவும் அச்சுறுத்தி வருகின்ற நிலையில், தற்போது அது இலங்கையிலும் பரவியுள்ளது. இத்தாலியில் இதற்காக பல்லாயிரக்கணக்கானோர் இறந்துள்ள நிலையில் மற்ற நாடுகள் மிகவும் உஷாராகியுள்ளது.  கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்று காலை 6 மணி வரை இலங்கையில் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது தமிழர்கள் வாழும் யாழ்பாண பகுதியில் ஒருவருக்கு கொரோனா பாதிப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.