இந்த மாவட்டத்திற்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை..!

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.  மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாளை நடைபெறும் கடை முக தீர்த்த வாரியை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 19ம் தேதி பணிநாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…!

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.  மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாளை நடைபெறும் கடை முக தீர்த்த வாரியை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 19ம் தேதி பணிநாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி,கல்லூரிகளுக்கு இந்த தேதிகளில் விடுமுறை – வெளியான அறிவிப்பு!

புதுக்கோட்டை,தஞ்சை மாவட்டங்களுக்கு ஏப்ரல் 11,13 ஆகிய தேதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வருகின்ற ஏப்ரல் 11 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார். நார்த்தமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல,தஞ்சை மாவட்டத்திற்கு ஏப்ரல் 13 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more

ஜாலிதான்…இன்று இந்த மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை!

நடப்பு ஆண்டில் பங்குனி உத்திர திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை- (பங்குனி 4-ம் தேதி) கொண்டாடப்படுகிறது.குறிப்பாக,பங்குனி உத்திர விழாவின் போது பழனி, திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்சோலை உள்ளிட்ட முருகன் கோயில்களில் தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்நிலையில்,பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.அதன்படி,அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால்,முக்கிய தேர்வுகள் நடைபெறும் பள்ளி,கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும் … Read more

#BREAKING: காரைக்காலில் நாளை உள்ளூர் விடுமுறை..!

கைலாசநாதர் கோயில் தேரோட்ட விழாவை முன்னிட்டு காரைக்காலில் நாளை (17-03-2022) உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.    

#BREAKING: தென்காசி மாவட்டத்திற்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை..!

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.  முக்கிய தேர்வுகள் நடைபெறும் பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும் மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜன் அறிவித்துள்ளார்.  பங்குனி உத்திரத்தை முன்னிட்டு  திருநெல்வேலி மாவட்டத்திற்கும் நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்க்கது.

மகிழ்ச்சி…6 மாவட்டங்களுக்கு இன்று பொங்கல் விடுமுறை – அரசு அறிவிப்பு!

தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று,கொல்லம்,இடுக்கி,வயநாடு, பத்தனம்திட்டா,பாலக்காடு,திருவனந்தபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று (ஜன.14) பொங்கல் விடுமுறை அறிவித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் 6 மாவட்டங்களுக்கு ஜனவரி 14 ஆம் தேதியில் பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளூர் விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று கோரி,கேரள முதலமைச்சருக்கு,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில்,தமிழ் பேசும் மக்கள் பெருமளவில் வாழும் கேரளாவின் 6 மாவட்டங்களில் பண்டிகைக்கு உள்ளூர் … Read more

இந்த மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள்,அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!

கன்னியாக்குமரி:கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள்,அரசு அலுவலகங்களுக்கு இன்று(டிச.24 ஆம் தேதி) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் வரும் டிச.25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.இதனை முன்னிட்டு இன்று இரவிலிருந்தே தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.அந்த வகையில்,தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை  கொண்டாடப்படவுள்ளது. பொதுவாக,மற்ற மாவட்டங்களை விட கன்னியாக்குமரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெறும்.இதனால்,டிச.25 ஆம் தேதி அரசு விடுமுறை … Read more

இன்று பள்ளி,கல்லூரி,அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிப்பு!

நீலகிரி:ஹெத்தை அம்மன் திருவிழாவையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள்,பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.அம்ரித் உத்தரவு பிறப்பித்துள்ளார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உள்ள ஹெத்தை அம்மன் கோயில் படுகர் சமுதாய மக்களின் குல தெய்வமாக கருதப்படுகிறது.இதனால், நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஹெத்தை அம்மன் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.அதன்படி,இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு செங்கோல் நாட்டுதல் விழாவுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய … Read more

நீலகிரியில் நாளை உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.அம்ரித் உத்தரவு. படுகர் சமுதாய மக்களின் ஹெத்தை அம்மன் திருவிழாவையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.அம்ரித் அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உள்ள கோயில் படுகர் சமுதாய மக்களின் குல தெய்வமாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் ஹெத்தையம்மன் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு செங்கோல் நாட்டுதல் விழாவுடன் … Read more