ஜாலிதான்…இன்று இந்த மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை!

ஜாலிதான்…இன்று இந்த மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை!

நடப்பு ஆண்டில் பங்குனி உத்திர திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை- (பங்குனி 4-ம் தேதி) கொண்டாடப்படுகிறது.குறிப்பாக,பங்குனி உத்திர விழாவின் போது பழனி, திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்சோலை உள்ளிட்ட முருகன் கோயில்களில் தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.

இந்நிலையில்,பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.அதன்படி,அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால்,முக்கிய தேர்வுகள் நடைபெறும் பள்ளி,கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும் மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜன் அறிவித்துள்ளார்.

அதே சமயம்,பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்திற்கும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.அதன்படி,அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும்,கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும்,இன்று நடத்தப்படும் முக்கிய தேர்வுகள் அனைத்தும் எந்த வித மாற்றமும் இல்லாமல் நடைபெறும் என்றும்,இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 26 சனிக்கிழமை அன்று பணி நாளாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube