RailwayJob:ரயில்வே ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் 21 காலிப்பணியிடங்கள், உடனே முந்துங்கள் !

ரயில்வே ஸ்போர்ட்ஸ் கோட்டா ஆட்சேர்ப்பு 2022: ரயில்வேயின் குரூப் சி விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் 21 பணியிடங்களுக்கான அறிவிப்பை வடகிழக்கு ரயில்வே,கோரக்பூர், வெளியிட்டுள்ளது. குரூப் C-ன்  காலிப்பணியிடங்களை  நிரப்புவதற்காக தகுதியுள்ள விளையாட்டு வீரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நார்த் ஈஸ்டர்ன் ரயில்வே ஆட்சேர்ப்பு(NER) 2022 க்கு 26/3/2022 முதல் 25/4/2022 வரை விண்ணப்பிக்கலாம். முக்கிய நாட்கள்:  விண்ணப்பத்தை சமர்பிப்பதற்கான கடைசி தேதி:25-4-2022 விண்ணப்பிக்கும் முறை: நார்த் ஈஸ்டர்ன் ரயில்வேயின்  (NER) அதிகாரப்பூர்வ இணையதள முகவரி  … Read more

இந்திய விமானப்படையில் குரூப் சி காலிப்பணியிடங்கள்..! 10, 12 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..

இந்திய விமானப்படை IAF “குரூப் சி ஆட்சேர்ப்பு”2022: இந்திய விமானப்படை(IAF)  ஹவுஸ் கீப்பிங் ஸ்டாஃப் (HKS), குக் (COOK), மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS) மற்றும் ஹிந்தி தட்டச்சர் (Hindi Typist),கார்பெண்டர்(Carpenter) போன்ற குரூப் சி பணிகளுக்கான  ஆட்சேர்ப்புக்கு விளம்பரம் செய்துள்ளது. இந்திய விமானப்படை குரூப் சி காலியிட விவரங்கள்: பதவியின் பெயர் காலியிடம் வேலை இடம் வீட்டு பராமரிப்பு பணியாளர்கள் (HKS) 1 விமான அதிகாரி கமாண்டிங், விமானப்படை நிலையம், பரேலி, உத்திரபிரதேசம் மல்டி டாஸ்கிங் … Read more

பிளஸ் டூ முடித்தவர்களுக்கு இந்திய கடற்படையில்  வேலைவாய்ப்பு.. 2500 காலிப்பணியிடங்கள்..!

இந்திய கடற்படை SSR AA 2022 ஆட்சேர்ப்பு: பிளஸ் டூ முடித்த திருமணமாகாத இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாலுமிகளாக சேர்வதற்கு திருமணமாகாத ஆண்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படை SSR AA 2022: SSR: senior secondary recruitment (மூத்த இரண்டாம் நிலை ஆள்சேர்ப்பு) AA: artificer apprentice (கலைஞர் பயிற்சி) காலியிடங்கள்: இந்திய கடற்படையில்  மொத்தம் 2500 காலியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.இந்த பணியிடங்கள் இரண்டு பதவிகளுக்கு தனித்தனியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியின் … Read more

பயணிகள் கவனத்திற்கு ! ரயில்வேயில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்..!

ரயில்வே ரெக்ரூட்மென்ட் போர்டு குரூப் D புதிய தேர்வு ஜூலை 2022 (CEN RRC 01/2019): ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப  கணினி அடிப்படையிலான தேர்வு  நடத்த உள்ளது. RRB குரூப் D தேர்வு  ஜூலை 2022 ல் தொடங்கி பல்வேறு கட்டங்களாக நடத்த ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் திட்டமிட்டுள்ளது. காலிப்பணியிடங்கள்: இந்திய ரயில்வே பிரிவுகளில் 1,03,769 காலியிடங்கள்உள்ளன. இந்த பணியிடங்களுக்கான தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும். RRB குரூப் D  தேர்வுக்கு … Read more

அருமையான வாய்ப்பு ! ரிசர்வ் வங்கியில் வேலை 303 காலிப்பணியிடங்கள் ..!

இந்திய ரிசர்வ் வங்கியில்  303 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய ரிசர்வ் வங்கியின் RBI கிரேடு B 2022 வேலை பற்றிய விவரங்கள்: RBI கிரேடு B அதிகாரிகளுக்கான  பொது(General),DEPR மற்றும் DSIM ஆகிய பணிகளுக்கான காலியிடங்களை நிரப்ப இந்திய ரிசர்வ் வங்கி தகுதியான விண்ணப்பங்களை வரவேற்கிறது. காலிப்பணியிட விவரங்கள்:  கிரேடு பி அதிகாரிகள்  – 294  பணியிடங்கள் உதவி மேலாளர்          –  9    பணியிடங்கள் விண்ணப்பதாரர்களின்  வயது வரம்பு : … Read more

இளைஞர் வேலைவாய்ப்பின்மை 25.5%-ஆக உயர்வு..!

நாட்டில் வேலைவாய்ப்பு நிலவரம் குறித்து பீரியாடிக் லேபர் ஃபோர்ஸ் சர்வே வெளியாகியுள்ளது. அதன்படி, நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களான 2021 ஏப்ரல்,மே மற்றும் ஜூன் வரை 22 மாநிலங்களில் எடுக்கப்பட்ட ஆய்வில் நகர்ப்புற இளைஞர்களிடையே வேலைவாய்ப்பின்மை சராசரி 25.5% ஆக இருந்தது. அதில், தமிழகத்தில் நகர்ப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மை 28.5%-ஆக இருந்தது. பெண்களிடம் வேலைவாய்ப்பின்மையில் 67 சதவிகிதத்தோடு காஷ்மீர் முதல் இடத்திலும்,  59 சதவிகிதத்தோடு கேரளா இரண்டாம் இடத்திலும் இருந்தன. அசாம், ராஜஸ்தான் மாநிலங்களில் பெண்களுக்கான … Read more

திருவிழாவில் மதம் பிடித்த யானை-பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்..!

கேரளா மாநிலம் திருச்சூர் ஆராட்டுபுழா கோயில் திருவிழா சிறப்பாக நடைபெற்று கொண்டிருந்தது. இந்த திருவிழாவில் 3 யானைகள் கொண்டுவரப்பட்டு சடங்குகள் நடைபெற்று கொண்டிருந்தன. இந்த யானைகளில் திடீரென ஒரு யானை மதம் பிடித்து மற்றொரு யானையை முட்டியது. இதனால் மற்ற 2 யானைகளும் மிரண்டு வெவ்வேறு திசைகளில் ஓடியதால் திருவிழாவிற்கு கூடியிருந்த பொதுமக்களும் பயந்து  அலறியடித்து ஓடத்தொடங்கினர். பயந்து ஓடியதில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர்  குழிகளுக்குள் விழுந்து படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து ஆக்ரோஷமாக காணப்பட்ட … Read more

சென்னையில் ரூ.9.81 கோடி மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள்- முதல்வர் நேரில் ஆய்வு..!

வேப்பேரியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்  பல்கலைக்கழகம் அமைந்துள்ள ராஜா முத்தையா சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு மற்றும் புனரமைப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து புளியந்தோப்பு, பெரம்பூர் பிரதான சாலை, மயிலாப்பூர், ராமாராவ் தெரு, மந்தைவெளி பேருந்து நிலையம் அருகில் தேவநாதன் தெரு உள்ளிட பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து பருவமழை காலத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் மழைநீர் வடிகால் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். … Read more

ஸ்பெயின் வீராங்கனை வீழ்த்தி 2-ம் சுற்றுக்கு முன்னேறிய சாய்னா நேவால் ..!

இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் 2-ம் சுற்றின் போட்டிக்கு இந்திய வீராங்கனை சாய்னாநேவால் முன்னேறியுள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினாவுடன்  சாய்னாநேவால் மோதினார். இதில் 21-17, 21 -19 என்ற செட் கணக்கில் ஸ்பெயின் வீராங்கணையை சாய்னாநேவால் வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் இரண்டாம் சுற்றுப்போட்டிக்கு சாய்னாநேவால் தகுதி பெற்றார்.      

கச்சா எண்ணெய் விலை இறங்க காரணம் என்ன..?

உக்ரைன் போரின் விளைவாக பிப்ரவரி 23-ல் பீப்பாய் ஒன்றுக்கு  94 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை மார்ச் 8-ம் தேதி 139 டாலராக உச்சம் அடைந்தது. உக்ரைன் ரஷ்யா இடையே சமாதான பேச்சு வார்த்தைகள் தொடங்கிய பின் கச்சா எண்ணெய் விலை படிப்படியாக குறைய தொடங்கியது. தினமும் 25,00,000 பீப்பாய்கள் அளவுக்கு கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை நீக்கி ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை மீண்டும் … Read more