ஸ்பெயின் வீராங்கனை வீழ்த்தி 2-ம் சுற்றுக்கு முன்னேறிய சாய்னா நேவால் ..!

இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் 2-ம் சுற்றின் போட்டிக்கு இந்திய வீராங்கனை சாய்னாநேவால் முன்னேறியுள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினாவுடன்  சாய்னாநேவால் மோதினார். இதில் 21-17, 21 -19 என்ற செட் கணக்கில் ஸ்பெயின் வீராங்கணையை சாய்னாநேவால் வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் இரண்டாம் சுற்றுப்போட்டிக்கு சாய்னாநேவால் தகுதி பெற்றார்.