யானையை விரட்டிய அதிமுக பிரமுகருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்!

elephant

கோவை அருகே ஆபத்தான முறையில் யானையை விரட்டிய அதிமுக பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது வனத்துறை. பாதுகாக்கப்பட்ட நவமலை பகுதியில் காரை ஒட்டி சென்ற பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக இளைஞர், இளம்பெண் பாசறை செயலாளர் மிதுனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உயர் ஒளிவிளக்கு (ஹை பீம் லைட்) பொருத்திய வாகனத்தை மலைச்சாலையில் இயக்கி, அப்பகுதியில் வந்த யானையை ஆபத்தான முறையில் விரட்டியதாக வனத்துறை குற்றச்சாட்டியுள்ளது. மலைச்சாலையில் உயர் ஒளியுடன் வந்த வாகனத்தை கண்டு … Read more

சென்று வாருங்கள் லட்சுமி…! எப்பொழுதும் உங்களை மறக்க மாட்டோம்…! – அண்ணாமலை

நாடிவரும் பக்தர்களை தும்பிக்கையால் ஆசீர்வதித்து வாழ்த்திய லட்சுமியை இழந்து விட்டோம் என்ற செய்தி மிகுந்த மனக்கவலை அளித்தது என அண்ணாமலை ட்வீட்.  புதுச்சேரியில் பிரசக்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி (32) திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது. அதிகாலையில் யானை லட்சுமியை பாகன் சக்திவேல், நடைபெயர்ச்சிக்கு அழைத்து சென்றபோது மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. யானை லட்சுமி இறப்பு காரணமாக மணக்குள விநாயகர் கோயில் நடை சாத்தப்பட்டது. உயிரிழந்த யானைக்கு புதுச்சேரி ஆளுநர் … Read more

கேரளாவில் சாலைக்கு நடுவே குட்டி ஈன்ற யானை-வரிசையில் காத்துநின்ற வாகனங்கள்..!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மரையூர் அருகே உள்ள சாலையில் யானை ஒன்று குட்டி ஈன்றுள்ளது. கருவுற்ற யானை ஒன்று பிரசவ வலியில் மரையூர் சாலையில் பிளிறியப்படி வந்துள்ளது. அதனை கண்ட வாகன ஓட்டிகள் தொலைதூரத்திலேயே வாகனங்களை நிறுத்தி விட்டு அமைதி காத்துள்ளனர். யானையும் 1 மணி நேரமாக பிரசவ வலியில் பிளிறியப்படி இருந்துள்ளது. பின்னர் சாலைக்கு நடுவே யானை குட்டியையும் ஈன்றுள்ளது. பிறகு குட்டியை தழுவிக்கொண்டு அதனை எழுந்து நிற்க வைத்து பின்னர் காட்டுக்குள் … Read more

யானை படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா.? மிரண்டு போன தமிழ் சினிமா.!

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் கடந்த ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “யானை”.இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். ட்ரம்ஸ்டிக் தயாரிப்பு நிறுவனம் படத்தை தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் சமுத்திரக்கனி, சரண்யா ரவி, யோகி பாபு, அம்மு அபிராமி, விஜய் டிவி புகழ், ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளர்கள். குடும்ப கதையை மையமாக வைத்து இந்த … Read more

பின்வாங்கிய அருண் விஜயின் யானை .., புதிய ரிலீஸ் தேதி இதோ…!

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்துள்ள புதிய திரைப்படம் தான் யானை. இந்த படம் வருகிற மே மாதம் ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பட வெளியீட்டு தேதியில் மாற்றம் செய்திருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், விநியோகஸ்தர்களின் வேண்டுகோளின் பேரில் வெளியீட்டு தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஜூன் 17ஆம் தேதி முதல் திரையரங்குகளில் யானை … Read more

திருவிழாவில் மதம் பிடித்த யானை-பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்..!

கேரளா மாநிலம் திருச்சூர் ஆராட்டுபுழா கோயில் திருவிழா சிறப்பாக நடைபெற்று கொண்டிருந்தது. இந்த திருவிழாவில் 3 யானைகள் கொண்டுவரப்பட்டு சடங்குகள் நடைபெற்று கொண்டிருந்தன. இந்த யானைகளில் திடீரென ஒரு யானை மதம் பிடித்து மற்றொரு யானையை முட்டியது. இதனால் மற்ற 2 யானைகளும் மிரண்டு வெவ்வேறு திசைகளில் ஓடியதால் திருவிழாவிற்கு கூடியிருந்த பொதுமக்களும் பயந்து  அலறியடித்து ஓடத்தொடங்கினர். பயந்து ஓடியதில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர்  குழிகளுக்குள் விழுந்து படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து ஆக்ரோஷமாக காணப்பட்ட … Read more

சத்தீஸ்கரில் யானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு..!

சத்தீஸ்கர் மாநிலத்தில் காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தம்தாரி மாவட்டத்தில் காட்டு யானை ஒன்று வயதான மூதாட்டியை (61 வயது) தாக்கியுள்ளது. இது குறித்து தெரிவித்த வனத்துறை அதிகாரி, இந்த மூதாட்டி சிங்பூர் வனப்பகுதிக்கு அருகில் உள்ள பலுச்சுவா கிராமத்தில் வசிப்பவர். நேற்று இரவு இந்த மூதாட்டி கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் கோபத்தோடு வனப்பகுதி நோக்கி சென்றுள்ளார். அங்கு காட்டு யானை தாக்கியதில் அந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார்.

#Breaking : கோவையில் ரயில் மோதி மூன்று யானைகள் உயிரிழப்பு ….!

கோவையில் ரயில் மோதி 2 குட்டி யானைகள் உட்பட மூன்று யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. கோவை மதுக்கரை அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க யானைகள்  முயற்சித்துள்ளன. அப்பொழுது கேரளாவில் இருந்து வந்த ரயில் ஒன்று யானைகள் மீது மோதி உள்ளது. இதில் 2 குட்டி யானைகள் உட்பட 3 யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

யானை மீட்கும் பணி : படகு கவிழ்ந்ததில் செய்தி தொடர்பாளர் பலி!

யானை மீட்கும் பணியை ஒளிப்பதிவாக்க சென்றிருந்த பிரபல தொலைக்காட்சி செய்தியாளர் படகு கவிழ்ந்தால், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக் எனும் பகுதியின் அருகில் உள்ள மகாநதியில் கடந்த வெள்ளிக்கிழமை வெள்ளம் கரைபுரண்டு ஓடியுள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானை ஒன்று மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், நதியின் நடுப்பகுதிக்கு சென்று மீண்டும் கரைக்கு வர முடியாமல் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டு இருந்துள்ளது. இதனை அடுத்து ஒடிசா பேரிடர் மீட்புப் படையினருக்கு தகவல் … Read more

பேருந்து கண்ணாடியை உடைத்த காட்டுயானை..!பயணிகளின் திக் திக் நிமிடங்கள்..!வீடியோ

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த காட்டு யானையின் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் அரசு பேருந்து ஒன்று கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது மேல்தட்டப்பள்ளம் என்ற இடத்தில் காட்டு யானை ஒன்று அரசு பேருந்தை வழிமறித்துள்ளது. இதனால் செய்வதறியாது, ஓட்டுநர் பேருந்தை பின்னோக்கி இயக்கியுள்ளார். இதன் பின்னர் பேருந்தை நோக்கி காட்டு யானையும் வேகமாக துரத்தி வந்துள்ளது. துரத்தி வந்த காட்டு யானை பேருந்தின் முன்பக்க கண்ணாடியை … Read more