குளிர்பானத்தில் விஷம் கலந்து பள்ளி மாணவன் கொலை.! குற்றப்பத்திரிக்கை தாக்கல்.!

குளிர்பானத்தில் விஷம் கொடுத்து காரைக்காலில் பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.  காரைக்காலில் பள்ளி மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த சம்பவத்தின் பெயரில் கொலை வழக்கின் கீழ் இன்று காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில்  காரைக்கால் காவல்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகையில், கொலையாளியாக குற்றம் சுமத்தப்பட்ட சகாயராணி கொடுத்த குளிர்பானத்தில் உள்ள விஷமும், அதே போல மாணவன் உடற்கூராய்வில் உடலில் இருந்த விஷமும் ஒன்று என குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்காலில் 2 நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தொடர் கனமழையால் புதுச்சேரி, காரைக்காலில் இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு. கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளை (4-11-2022) அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கல்வி அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று பள்ளிக்கல்வி இயக்கம் அறிவித்துள்ளது. #SchoolHoliday : Schools in #Puducherry … Read more

#BREAKING: புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என்று அம்மாநில அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு. கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளை (4-11-2022) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். தொடர் கனமழையால் புதுச்சேரி, காரைக்காலில் ஏற்கனவே இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை வரும் 6-ஆம் தேதி வரை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ள … Read more

காரைக்கால் பள்ளி மாணவன் மரணம்.! 2 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட்.! மேலும் ஓர் முக்கிய உத்தரவு….

காரைக்கால் பள்ளி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 2 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்ய புதுசேரி முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  காரைக்கால் பள்ளி மாணவன் பாலமணிகண்டன் சில நாட்களுக்கு முன்னர் குளிர்பானத்தில் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டார். சக மாணவியின் தயார் சகாயராணி, தன் மகளை விட நன்றாக படித்து விட கூடாது என நினைத்து விஷம் கொடுத்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருந்தது. மாணவனுக்கு விஷம் கொடுத்தது சகாயராணி தான். ஆனால், அவன் உயிரிழந்ததுக்கு காரணமாக, … Read more

அலட்சியமான அரசு மருத்துவமனைக்கு எதிராக இன்று 10,000 கடைகள் முழு அடைப்பு.!

விஷம் கொடுத்து உயிரிழந்த பள்ளி மாணவனின் உயிரிப்புக்கு அலட்சியமாக நடந்து கொண்ட அரசு மருத்துவமனையின் போக்கே காரணம் என காரைக்கால் மாவட்டத்தில் முழு கடையடைப்பு நடைபெற்று வருகிறது.   சில தினங்களுக்கு முன்னர் தமிழகத்தில் பரபரப்பை உண்டாக்கிய சம்பவம் என்றால் தன மகளுடன் படிக்கும் சக மாணவன் படிப்பில் தன் மகனை முந்திவிட கூடாது என சக மாணவியின் தாயார் அந்த மாணவனுக்கு விஷம் கொடுத்த கொலை செய்த சம்பவம் தான். இதில் தயார் சகாயராணி கைது செய்யப்பட்டு … Read more

காரைக்காலில் காலராவால் இருவர் உயிரிழப்பு ! அவசர நிலையை பிரகடனம்

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அதிகரித்து வரும்  காலரா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த இருவர் இணைநோய்களால் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் காலரா பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பகுதிகளில் சிறப்பு குழு அமைத்து கண்காணிக்க  துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் எச்சிரிக்கையாக இருக்குமாறு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். அதிகரித்து வரும் காலரா தொற்றை கட்டுப்படுத்த அம்மாநில சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்நிலையில் மாநிலம் முழுவதும் பொதுசுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கொதிக்கவைத்த … Read more

#எச்சரிக்கை…10 நாட்களில் 800-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு – “பொது சுகாதார அவசர நிலை” பிறப்பித்த அரசு!

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதன்காரணமாக,மாவட்ட நிா்வாகம் சாா்பில்,மாவட்டம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில்,அது காலராவுக்கான அறிகுறியாக இருப்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில்,கடந்த 10 நாட்களில் 800-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி,வயிற்றுப்போக்கு,மயக்கம் போன்ற உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் காலரா நோய் பரவும் அபாயம் இருப்பதாக புதுச்சேரி சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில்,காரைக்கால் மாவட்டத்தை “பொது சுகாதார அவசர நிலையாக”  புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக,புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள … Read more

#BREAKING: காரைக்காலில் நாளை உள்ளூர் விடுமுறை..!

கைலாசநாதர் கோயில் தேரோட்ட விழாவை முன்னிட்டு காரைக்காலில் நாளை (17-03-2022) உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.    

புதுச்சேரி : பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு …!

தொடர் மழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, தொடர் மழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு … Read more

கனமழையால் காரைக்கால் பள்ளிகளுக்கு விடுமுறை.!

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.அதிலும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் பெய்த கனமழையால் அங்குள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக புதுச்சேரியில் 9 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது .அந்த நிலையில் சமீபத்தில் இந்த புரேவி புயலால் பெய்த மழை காரணமாக … Read more